சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!

Mar 20, 2025,06:57 PM IST

மும்பை:   2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு 58 கோடி பரிசு தொகை வழங்க உள்ளதாக பி .சி.சி.ஐ  அறிவித்துள்ளது.


2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் அண்மையில் துபாயில் நடைபெற்றது. இதில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று இருந்தது. அப்போது குரூப் சுற்றில் இந்திய அணி விளையாடிய  மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் போட்டியிட்டு அதிலும் வெற்றி கண்டது ‌.




இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக முறை பட்டத்தை வென்ற அணி என்ற பெருமையைப் இந்திய அணி பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் கூட தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூபாய் 58 கோடி பரிசு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகை இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு தலா மூன்று கோடியும், துணை பயிற்சியாளருக்கு தலா  50 லட்சமும் பிரித்துக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்