மகாராஷ்டிராவில் பரவும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேருக்கு பாதிப்பு

Aug 07, 2024,05:04 PM IST

மும்பை: மஹாராஷ்டிராவின், புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ்சால் பதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 68 முதல் 78 வயது உடையவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த ஜூன் மாதம் 46 வயதான டாக்டர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் சில நாட்களிலேயே அவரது மகளுக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 26 கர்ப்பிணிகள் உட்பட 66 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டால், அவரது கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்குகிறது. குறிப்பாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை எற்படுத்தக் கூடும் என டாக்டர்கள் தெரிவித்தனர். 




இந்த ஜிகா வைரஸ் பாதிப்பு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் நான்கு பேர் உயிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த வைரஸ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறதாம். அவர்கள் இந்த வைரசால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனராம்.


நோய்க்கான அறிகுறிகள்:


டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்களின் மூலமாக பரவி வருவது தான் ஜிகா வைரஸ். இந்த ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள் உடலில் இருக்கும். பாதிப்பு ஏற்பட்டு 3 அல்லது 7 நாட்களுக்கு பிறகு தான் உடலில் அறிகுறிகள் காணப்படும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். 


இதுவரை இந்த நோய் தொற்றிற்கு எந்த வித தடுப்பூசியும் கண்டு பிடிக்கப்படவில்லை. முதன்முதலில் இந்த வைரஸ் 2016ம் ஆண்டு குஜராத்தில் கண்டறியப்பட்டது.  இதன்பிறகு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. 


அதிக ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். கொசுக்கடி மூலம் இந்நோய் பரவுவதால் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பாத்து கொண்டால் இந்நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்