"ஈகை" மூலம் மீண்டும் அசத்த வரும்.. அஞ்சலி!

Jun 23, 2023,10:06 AM IST
சென்னை: திறமையான நடிகையாக அறியப்பட்ட அஞ்சலி மீண்டும் ஒரு அட்டகாசமான பாத்திரத்தில் கலக்க வருகிறார்.. ஈகை படத்தில்.

கற்றது தமிழ் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே அவர் பேசப்பட்டார். வெறும் அழகு மட்டும் என்னிடம் இல்லை.. சூப்பரான நடிப்புத் திறமையும் இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வந்த படங்களில் நிரூபித்தார்.



குறிப்பாக அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அஞ்சலி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈகை என்ற படத்தில் அஞ்சலி முக்கியப் பாத்திரத்தில், நாயகியாக நடிக்கவுள்ளார். இது அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாரதிராஜா, தெலுங்கு நடிகர் சுனில், இளவரசு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தில் கதை நாயகியாக நடிக்கவுள்ளார் அஞ்சலி.  கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ்  தயாரிக்கும்
இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. சென்னையில் தொடங்கி மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.



அசோக் வேலாயுதம் இப்படத்தை இயக்குகிறார். இவருக்கு இதுதான் முதல் படம். என்ன மாதிரியான கதை இது என்று அவரிடம் கேட்டபோது,  சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த "ஈகை" என்று சொன்னார் அசோக் வேலாயுதம்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்