இதை எதிர்பார்க்கலையே.. திடீரென கொட்டிக் குவித்த மழையால்.. ஸ்டன் ஆன  சென்னை!

Jun 19, 2023,09:40 AM IST
சென்னை: சென்னை மக்கள் இந்த திடீர் ஜூன் மாத மழையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென கொட்டிக் குவித்த கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மக்களை நிலைகுலைய வைத்து விட்டது.

வழக்கமாக கோடை காலத்தில் இப்படி ஒரு மழை சென்னைக்கு வருவது மிக மிக அரிதாகும். கிட்டத்தட்ட 27 வருடங்களுக்கு முன்புதான் இப்படி ஒரு பேய் மழை பெய்து தீர்த்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் மிகக் கடுமையான வெயில் பதிவாகி வந்த நிலையில் நேற்று திடீரென நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போனது.



சஹாரா பூமி போல அனல் பறக்கக் காணப்பட்ட சென்னை நேற்று காலை முதல் ஊட்டி கொடைக்கானல் போல மாறியது. விட்டு விட்டுப் பெய்த மழையால் பெருமளவில் வெட்கை தணிந்தது. ஆனால் இரவில் நிலைமை இன்னும் வேகமாக மாறியது. மெல்லத் தொடங்கிய மழையானது அப்டியே வேகம் பிடித்து கன மழையானது. நள்ளிரவுக்கு மேல் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.

இந்த திடீர் கன மழையால் சென்னை மக்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். ஜூன் மாதத்தில் இப்படி ஒரு கன மழையா என்ற குழம்பிப் போயினர். ஆனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகத் தொடங்கியது. பல பகுதிகளில் தெருக்களிலும் தண்ணீர் தேங்கி நிற்க ஆரம்பித்தது. இதனால் ராத்திரியில் பல பகுதிகளில் மக்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

திடீர் வெள்ளத்தால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் மக்கள் சிறு பாதிப்பை சந்திக்க நேரிட்டது. பல வீடுகளில் பிள்ளைகளின் பள்ளிப் புத்தகங்கள், பொருட்கள் உள்ளிட்டவை நனைந்து போய் அவர்கள் வேதனை அடைந்தனர்.

இப்படி ஒரு மழையை இப்போது எதிர்பார்க்கவில்லை. லேசாக பெய்து விட்டுப் போய் விடும் என்றுதான் நினைத்தோம். ஆனால் இப்படி வெள்ளம் போல வரும் என நினைக்கவில்லை என்பதே சென்னைவாசிகள் பலரின் கருத்தாக உள்ளது. தற்போது மழை மெல்ல குறைந்து லேசாக பெய்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு சீரமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் அதை வடியச் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்