ராங் சைடில் வந்த பள்ளிப் பேருந்து.. வேகமாக வந்த கார் மோதி.. 6 பேர் பலி

Jul 11, 2023,09:28 AM IST
டெல்லி: டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலையில் தவறான பாதையில் வந்த ஒரு பள்ளிக்கூடப் பேருந்து மீது கார், நிலை தடுமாறி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோரமான சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.

டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் வேயில் இன்று காலை வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதி வேக எக்ஸ்பிரஸ் வே இது என்பதால் வாகனங்கள் பெரும்பாலும் நல்லவேகத்தில்தான் செல்லும். அந்த சமயத்தில் பள்ளிக்கூட பேருந்து ஒன்று தவறான பாதையில் வந்து கொண்டிருந்தது. இதை எதிர்பார்க்காத, அதே திசையில் வந்த கார் ஒன்று நிலை தடுமாறி, பஸ் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.



கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காரின் முன்பு பகுதி அப்படியே நொறுங்கிப் போனது. பஸ்ஸின் முன்பகுதியும் பெரும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் சரியான திசையில் வந்தபோதும், பஸ் தவறான முறையில் வந்ததால்தான் இந்த கோர விபத்து நடந்து விட்டது.

காருக்குள் சிக்கியிருந்த உடல்களை மிகவும் சிரமப்பட்டுத்தான் வெளியே எடுக்க முடிந்தது. காலையில் நடந்த இந்த சம்பவம் டெல்லியை உலுக்கி விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்