மதுரையில் ராஜமவுலி.. ஜிகர்தண்டா குடிச்சுக்கிட்டே செல்பி..  கவனிச்சீங்களா!?

Jul 11, 2023,02:11 PM IST
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலி சத்தம் போடாமல் தமிழ்நாட்டுப் பக்கம் தனது குடும்பத்தோடு ஒரு குட்டி விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார். 

மதுரையில் ஜில் ஜில் ஜிகர்தண்டாவும் குடித்து மகிழ்ந்திருக்கிறார். இதுதொடர்பான ஒரு வீடியோவையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பாகுபலிக்கு முன்பு பாகுபலிகுக்குப் பின்பு என்று ராஜமவுலியை இரண்டாக பிரிக்கலாம்.. பாகுபலிக்கு முன்பு அவர் பாய்வதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பாகுபலிக்குப் பின்னர் ராஜமவுலியின் வேகமே வேறு லெவலுக்குப் போய் விட்டது.



பாகுபலி இந்திய அளவில் சினிமா உலகை புரட்டிப் போட்டது என்றால் அவரது ஆர்ஆர்ஆர் உலக அளவில் அவரைக் கொண்டு போய்விட்டது. சர்வதேச திரை ரசிகர்களிடையே இந்தியத் திரையுலகை வேறு கோணத்துக்கு கொண்டு போய் விட்டது. ஆஸ்கர் விருதை தட்டி வந்த ஆர்ஆர்ஆர் மூலம் ராஜமவுலி சர்வதேச திரையுலகை தன் பக்கம் ஈர்த்து விட்டார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துடன் ஜாலியாக தமிழ்நாட்டுக்குள் ஒரு சுற்றுலா வந்து போயிருக்கிறார் ராஜமவுலி. இதுகுறித்து அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்,  மத்திய தமிழ்நாட்டில் சாலை மார்க்கமாக ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டு வந்தேன். எனது மகள் கோவில்களுக்குப் போகலாம் என்று கூறியதால் எனது ஆசையும் கூடவே நிறைவேறி விட்டது.

ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம், கானாடு காத்தான், தூத்துக்குடி, மதுரை என போய் வந்தோம். சில நாட்கள் மட்டுமே பயணத் திட்டம் என்பதால் அதிகம் போக முடியவில்லை. பாண்டிய மன்னர்கள், சோழர்கள், நாயக்கர்கள் உள்ளிட்ட மன்னர்களின் அருமையான கட்டடக் கலைப் படைப்புகள், கட்டுமானங்கள், ஆழமான இறைப் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அத்தனையும் பிரமிக்க வைத்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் சாப்பாடு... அது மந்திரக் கூடமாக இருக்கட்டும்.. கும்பகோணமாக இருக்கட்டும்.. ராமஸே்வரம் காக்கா ஹோட்டல் முருகன் மெஸ்ஸாக இருக்கட்டும்.. பிரமாதமாக இருந்தன.  எல்லா இடத்திலும் சாப்பாடு அட்டகாசம். கண்டிப்பாக 2, 3 கிலோ எடை கூடியிருப்பேன். அப்படி சாப்பிட்டேன். 

3 மாத வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு அமைந்த இந்த உள்நாட்டுப் பயணம் ரொம்ப புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது, உற்சாகமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜமவுலி.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்