"ஓ வெரிகுட்".. வந்தே பாரத் ரயிலைச் சுற்றிப் பார்த்து.. வியந்து போன தமிழிசை செளந்தரராஜன்!

Jun 26, 2023,01:18 PM IST
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 25வது வந்தே பாரத் ரயிலை சுற்றிப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில்தான் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 25வது வந்தே பாரத் ரயிலை முடித்து அசத்தியுள்ளது சென்னை ஐசிஎப்  ரயில் பெட்டி தொழிற்சாலை. இதைத் தொடர்ந்து 25வது வந்தே பாரத் ரயிலை சுற்றிப் பார்க்க விரும்பி அங்கே சென்றார் டாக்டர் தமிழிசை.



ரயிலைப் பார்க்க வந்த தமிழிசைக்கு ரயிலை சுற்றிக் காட்டி அதிகாரிகள் அதில் உள்ள வசதிகள், சிறப்புகளை விளக்கிக் கூறினர். அதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்ட தமிழிசை அதிகாரிகளைப் பாராட்டினார். எமர்ஜென்சி ஏதாவது ஏற்பட்டால் டிரைவருடன் பயணிகள் நேரடியாக பேசும் வசதியும் இந்த ரயிலில் இருப்பதாக அதிகாரி கூற அதைக் கேட்ட தமிழிசை, ஓ வெரிகுட் என்று பாராட்டினார்.

இதுகுறித்து டாக்டர் தமிழிசை போட்டுள்ளடிவிட்டீல்,  சென்னை, ஐ.சி.எப் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட 25-வது வந்தேபாரத் அதிவிரைவு ரயிலை பார்வையிட்டு சென்னை, ஐ.சி.எப் இரயில்வே  மேலாளர், அலுவலகப் பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவித்தேன்.

வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்ட இரயில்களை தற்போது அதிநவீன  வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்களை நாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு ���ிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தமிழிசை.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்