ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... முதல் சுற்றில் சுயேட்சையிடம் வீழ்ந்த தேமுதிக

Mar 02, 2023,12:45 PM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை விடவும் தேமுதிக வேட்பாளர் மிக குறைவான ஓட்டுக்களை பெற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தேமுதிக வேட்பாளர் அவரை முந்தி விட்டார்.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக இருக்க, மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. 



முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை விட சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா அதிக வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளரான முத்து பாவா  178 ஓட்டுக்களும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றில் தேமுதிகவை சுயேச்சை முந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால் தற்போது சுயேச்சை பின் தங்கி விட்டார், தேமுதிக சற்று கூடுதல் வாக்குகளைப் பெற்று தப்பியது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்