ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... முதல் சுற்றில் சுயேட்சையிடம் வீழ்ந்த தேமுதிக

Mar 02, 2023,12:45 PM IST
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளரை விடவும் தேமுதிக வேட்பாளர் மிக குறைவான ஓட்டுக்களை பெற்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தேமுதிக வேட்பாளர் அவரை முந்தி விட்டார்.



ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டாவது இடத்தில் அதிமுக இருக்க, மூன்றாவது இடத்தை நாம் தமிழர் கட்சி பிடித்துள்ளது. 



முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த்தை விட சுயேச்சை வேட்பாளர் முத்து பாவா அதிக வாக்குகள் பெற்றார். சுயேச்சை வேட்பாளரான முத்து பாவா  178 ஓட்டுக்களும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 112 வாக்குகளும் பெற்றனர். முதல் சுற்றில் தேமுதிகவை சுயேச்சை முந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆனால் தற்போது சுயேச்சை பின் தங்கி விட்டார், தேமுதிக சற்று கூடுதல் வாக்குகளைப் பெற்று தப்பியது.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்