"ஏன்டா இம்ரான் கானை பிரதமராக்கினோம்னு இருக்கு".. அலுத்துக் கொண்ட மியான்தத்!

Jul 02, 2023,01:32 PM IST
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு உயர நான் நிறைய உதவி செய்தேன். ஆனால் அதற்காக தற்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், இம்ரான் கானின் நெருங்கிய நண்பருமான ஜாவேத் மியான்தத்.

மியான்தத் குறித்து அந்தக் கால கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிறைய தெரியும். அவர் செய்யாத சேட்டையே இல்லை மைதானத்தில். எதிரணியினரை குறிப்பாக இந்திய வீரர்களை சீண்டுவது என்றால் இவருக்கு லட்டு சாப்பிடுவது போல. அத்தனை சேட்டை செய்தார். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுப்பது வழக்கம். 

இரு அணிகளும் சந்தித்தாலே அங்கே அனல் பறக்கும். கபில்தேவ் தலைமையிலான அணியும், இம்ரான் கான் அணியும் சந்தித்தாலே பட்டையைக் கிளப்பும் போட்டிகள். இம்ரான் கான் அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தவர்தான் மியான்தத். நம்ம ஊரில் எப்படி கவாஸ்கரோ அதுபோலத்தான் பாகிஸ்தானுக்கு மியான்தத்.

மியான்தத்துக்கும், நம்ம ஊரில் தீவிரவாத வேலைகளைச் செய்து தேடப்படும் குற்றவாளியாக திகழும் தாவூத் இப்ராகிமுக்கும் இடையே நெருங்கிய உறவும் உள்ளது. இருவரும் சம்பந்திகள் ஆவர். இந்த நிலையில், இம்ரான் கான் குறித்து புலம்பியுள்ளார் மியான்தத்.

 


இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஆரி நியூஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு உயர நான் உதவினேன்.  ஆனால் அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.

அவருக்கு உதவிய எனக்கு இதுவரை அவர் ஒருமுறை கூட நன்றி சொன்னதே இல்லை.  இப்படிப்பட்டவருக்குப் போய் உதவினோமே என்று வருத்தமாக இருக்கிறது.

எனது தந்தைக்கு கிரிக்கெட் என்றால் உயிர். நானும் சரி எனது சகோதரர்களும் சரி கிரிக்கெட் விளையாடாத இடங்களே இல்லை. தெருவில் விளையாடியிருக்கிறோம். வீட்டு மாடி  மீது கூட விளையாடியிருக்கிறோம். எப்போதெல்லாம் நாட்டுக்காக நான் கிரிக்கெட் ஆடினேனோ அப்போதெல்லாம் நமது அணி தோல்வி அடையக் கூடாது என்ற வேகத்தில்தான் ஆடுவேன். தோல்வியே அடைந்தாலும் கூட பெரியஅளவில் வித்தியாசம் இல்லாமல்தான் பார்த்துக் கொள்வேன்.

நான் கேப்டனாக இருந்தபோது ஒரு வீரர் கூட என்னிடம் முரண்பட்டதில்லை. ஆட்சேபனை தெரிவித்ததில்லை. நான் அப்படித்தான் வீரர்களுடனும் பழகுவேன் என்று கூறியுள்ளார் மியான்தத்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்