"ஏன்டா இம்ரான் கானை பிரதமராக்கினோம்னு இருக்கு".. அலுத்துக் கொண்ட மியான்தத்!

Jul 02, 2023,01:32 PM IST
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு உயர நான் நிறைய உதவி செய்தேன். ஆனால் அதற்காக தற்போது வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், இம்ரான் கானின் நெருங்கிய நண்பருமான ஜாவேத் மியான்தத்.

மியான்தத் குறித்து அந்தக் கால கிரிக்கெட் ரசிகர்களுக்கு நிறைய தெரியும். அவர் செய்யாத சேட்டையே இல்லை மைதானத்தில். எதிரணியினரை குறிப்பாக இந்திய வீரர்களை சீண்டுவது என்றால் இவருக்கு லட்டு சாப்பிடுவது போல. அத்தனை சேட்டை செய்தார். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுப்பது வழக்கம். 

இரு அணிகளும் சந்தித்தாலே அங்கே அனல் பறக்கும். கபில்தேவ் தலைமையிலான அணியும், இம்ரான் கான் அணியும் சந்தித்தாலே பட்டையைக் கிளப்பும் போட்டிகள். இம்ரான் கான் அணியில் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தவர்தான் மியான்தத். நம்ம ஊரில் எப்படி கவாஸ்கரோ அதுபோலத்தான் பாகிஸ்தானுக்கு மியான்தத்.

மியான்தத்துக்கும், நம்ம ஊரில் தீவிரவாத வேலைகளைச் செய்து தேடப்படும் குற்றவாளியாக திகழும் தாவூத் இப்ராகிமுக்கும் இடையே நெருங்கிய உறவும் உள்ளது. இருவரும் சம்பந்திகள் ஆவர். இந்த நிலையில், இம்ரான் கான் குறித்து புலம்பியுள்ளார் மியான்தத்.

 


இதுகுறித்து பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஆரி நியூஸுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,  பாகிஸ்தான் தெஹரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பிரதமர் பதவிக்கு உயர நான் உதவினேன்.  ஆனால் அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.

அவருக்கு உதவிய எனக்கு இதுவரை அவர் ஒருமுறை கூட நன்றி சொன்னதே இல்லை.  இப்படிப்பட்டவருக்குப் போய் உதவினோமே என்று வருத்தமாக இருக்கிறது.

எனது தந்தைக்கு கிரிக்கெட் என்றால் உயிர். நானும் சரி எனது சகோதரர்களும் சரி கிரிக்கெட் விளையாடாத இடங்களே இல்லை. தெருவில் விளையாடியிருக்கிறோம். வீட்டு மாடி  மீது கூட விளையாடியிருக்கிறோம். எப்போதெல்லாம் நாட்டுக்காக நான் கிரிக்கெட் ஆடினேனோ அப்போதெல்லாம் நமது அணி தோல்வி அடையக் கூடாது என்ற வேகத்தில்தான் ஆடுவேன். தோல்வியே அடைந்தாலும் கூட பெரியஅளவில் வித்தியாசம் இல்லாமல்தான் பார்த்துக் கொள்வேன்.

நான் கேப்டனாக இருந்தபோது ஒரு வீரர் கூட என்னிடம் முரண்பட்டதில்லை. ஆட்சேபனை தெரிவித்ததில்லை. நான் அப்படித்தான் வீரர்களுடனும் பழகுவேன் என்று கூறியுள்ளார் மியான்தத்.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்