ஊழல் வழக்கில் இம்ரான் கானின் கட்சி தலைவர் கைது

Jun 02, 2023,03:39 PM IST
இஸ்லாமாபாத் : இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி, ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரான பர்வேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து கடந்த வாரம் தற்காலிக நிவாரணம் பெற்றார் பர்வேஸ். அவர் நெஞ்சுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவரது மருத்துவ சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  


ஆனால் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்து வந்தார் பர்வேஸ். இந்நிலையில் திடீரென பர்வேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வீட்டு காவலில் இருந்த பர்வேஸ் வீட்டில் இருந்து தப்ப முயன்றதாகவும், அவரை போலீசார் தடுத்து, கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இம்ரான் கான் கைது சம்பவத்திற்கு பிறகு அவரது கட்சியை சேர்ந்த ஊற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மே 09 ம் தேதி முதல் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் வன்முறையை தூண்டியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்