ஊழல் வழக்கில் இம்ரான் கானின் கட்சி தலைவர் கைது

Jun 02, 2023,03:39 PM IST
இஸ்லாமாபாத் : இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி, ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரான பர்வேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து கடந்த வாரம் தற்காலிக நிவாரணம் பெற்றார் பர்வேஸ். அவர் நெஞ்சுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவரது மருத்துவ சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  


ஆனால் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்து வந்தார் பர்வேஸ். இந்நிலையில் திடீரென பர்வேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வீட்டு காவலில் இருந்த பர்வேஸ் வீட்டில் இருந்து தப்ப முயன்றதாகவும், அவரை போலீசார் தடுத்து, கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இம்ரான் கான் கைது சம்பவத்திற்கு பிறகு அவரது கட்சியை சேர்ந்த ஊற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மே 09 ம் தேதி முதல் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் வன்முறையை தூண்டியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்