ஊழல் வழக்கில் இம்ரான் கானின் கட்சி தலைவர் கைது

Jun 02, 2023,03:39 PM IST
இஸ்லாமாபாத் : இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சியின் தலைவர் பர்வேஸ் இலாகி, ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வரான பர்வேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி கைது நடவடிக்கையில் இருந்து கடந்த வாரம் தற்காலிக நிவாரணம் பெற்றார் பர்வேஸ். அவர் நெஞ்சுவலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவரது மருத்துவ சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  


ஆனால் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்து வந்தார் பர்வேஸ். இந்நிலையில் திடீரென பர்வேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் பாகிஸ்தானில் மீண்டும் பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வீட்டு காவலில் இருந்த பர்வேஸ் வீட்டில் இருந்து தப்ப முயன்றதாகவும், அவரை போலீசார் தடுத்து, கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இம்ரான் கான் கைது சம்பவத்திற்கு பிறகு அவரது கட்சியை சேர்ந்த ஊற்றுக்கணக்கான தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மே 09 ம் தேதி முதல் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் வன்முறையை தூண்டியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்