இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் நிறுத்தம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்

Jun 21, 2023,03:08 PM IST


சென்னை : இயக்குநர் ஷங்கரின் இந்தியன்2 படம் மீண்டும் சிக்கலைச் சந்தித்துள்ளது.


டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படம் 2019 ம் ஆண்டே துவங்கப்பட்டது. ஆனால் துவங்கிய சில மாதங்களிலேயே விபத்து, வழக்கு என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை இந்த படம் சந்தித்து வருகிறது. பல கட்ட பிரச்சனை, போராட்டம், தாமதம் ஆகியவற்றை கடந்த ஒரு வழியாக இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.




கமலின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் இந்தியன் 2 தான்.  இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் படத்திற்கான டப்பிங் பேசும் வேலைகளையும் கமல் செய்து வருகிறார். சமீபத்தில் தான் கமல் தனது போஷன் டப்பிங்கை முடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது நடிகர் சித்தார்த் இந்தியன் 2 படத்திற்காக டப்பிங் பேசி வருகிறார். 


இந்த மாத இறுதியுடன் ஷூட்டிங்கை முடித்து விட்டு, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 2024 ம் ஆண்டு பொங்கலுக்கு இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான வேலைகளை மும்முரமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


லேட்டஸ்ட் தகவலின் படி இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னை விமான நிலையத்தில் நடந்து வருகிறது. இதற்காக ரூ.1.24 கோடி பணம் செலுத்தி விமான நிலையத்தின் முன்பகுதியில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் அனுமதி பெற்ற இடங்களை தாண்டி, விமான நிலையத்திற்குள் வேறு சில இடங்களிலும் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். இதனால் கடுப்பான அதிகாரிகள் ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தி விட்டார்களாம். இதனால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் படக்குழு தவித்து வருகிறது. 


இந்தியன் 2 படத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருப்பதால், படத்தின் ஷூட்டிங் ஏதாவது ஒரு காரணத்தால் தடைபட்டு வருவதால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் ஷூட்டிங்கை முடிக்க இன்னும் சில வாரங்கள் எடுக்கலாம் என்பதால் ரசிகர்கள், ஷூட்டிங்கை எப்போ தான்ப்பா முடிப்பீங்க என கேட்டு வருகின்றனர்.


இந்தியன் "தாத்தா" லேட்டா வந்தாலும்.. "கெத்தா" வருவார்னு நம்புவோம்

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்