ட்விட்டருக்கு போட்டியாக வந்த திரெட்ஸ்... 7 மணி நேரத்தில் 1 கோடி பயனாளர்கள்!

Jul 06, 2023,04:55 PM IST
டெல்லி :  மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள திரெட்ஸ் சமூக வலைதளம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எலன் மஸ்கின் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் அதிரடியாக அடுத்தடுத்து பல மாற்றங்களை கொண்டு வந்தார். ப்ளூ டிக் அகற்றம், பணம் செலுத்துபவர்களுக்கே  ப்ளூ டிக் என்பது போன்ற பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதனால் அடுத்து என்ன அறிவிப்பை கொண்டு வருவாரோ என ட்விட்டர் பயனாளர்கள் திக் திக் என இருந்து வந்தனர்.



இந்நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா, திரெட்ஸ் (Threads) என்ற புதிய தளத்தை உருவாக்கி உள்ளது. இதை மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் இன்று (ஜூலை 06) அறிமுகம் செய்து வைத்தார். இந்த புதிய ஆப்பை அவர் அறிமுகம் செய்த முதல் ஒரு மணி நேரத்தில் 2 மில்லியன் பேரும், 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பேரும் login செய்துள்ளனர். 

இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பவர்கள் மட்டுமே இந்த புதிய தளமான திரெட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும். இது பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ட்விட்டர் தளம் செய்தி அடிப்படையிலானது. ஆனால் இன்ஸ்டாகிராம் படங்கள் மற்றும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டவை. இது எப்படி ட்விட்டருக்கு மாற்றாக அமைய முடியும் என பயனாளர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது பொது விவாத தளமாக செயல்படும். ஆனால் இதன் பயன்களை முழுவதுமாக புரிந்து கொள்ள பயனாளர்களுக்கு சிறிது காலம் ஆகும் என மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். அதே சமயம் இது புதிய அனுபவத்தை தரும் என்றும், தற்போது இந்த ஆப் பிளே ஸ்டோர் ஆப்பில் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்