நானும் பெரியாரின் பேரன் தான்..  அதற்காக அரசியலுக்கு வரவில்லை.. தெறிக்க விட்ட கமல்!

Feb 20, 2023,10:56 AM IST
ஈரோடு : நான் சுய லாபத்திற்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்லை என ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கமல் பேசினார். 



கமல்ஹாசனின் பிரச்சார பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி உள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி போட்டியிடாது என அறிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்தார்.

கமலின் ஈரோடு வருகையை முன்னிட்டு நேற்று காலை முதலே ட்விட்டரில் #Kamalhaasan ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வந்தது. மாலையில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பிரசாரத்தை துவக்கிய கமல் பேசுகையில் அதிரடியாக பேசி தெறிக்க விட்டார்.



கமல்ஹாசன் பேசுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பெரியார் பேரன்.. அவர் மட்டுமல்ல.. நானும் பெரியாரின் பேரன் தான். பெரியாரின் மேடைப் பேச்சுக்களை கீழே நின்று கேட்டு வளர்ந்த பிள்ளை நான். நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள் எனது பாதை புரியும். 

நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்கோ, ஆதாயத்திற்காகவோ இல்லை. நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன்.கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும் போது எதுவும் தப்பில்லை. எல்லாம் நியாயம். நாட்டிற்காக கட்சி வரையறைகளை கடந்து கரம் கோர்த்திருக்கிறேன். 

விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்புகொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார். என் சொந்த பிரச்சனை, நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்று சொன்னேன். சுயநலத்திற்காக கூட்டணி வைக்கவில்லை.

நாட்டை காப்பாற்றவே இங்கு வந்துள்ளேன். தமிழர்களை அடக்கி ஆள முடியாது என அந்த மையத்திற்கு சொல்ல வேண்டும். தமிழர்களின் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய தேர்தல் இது. ஆகவே ஒன்றிணைந்துள்ளோம் என்று பேசினார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்