சென்னை: பிரபல நடிகரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தனது தோழியுடன் இருப்பது போன்ற போட்டகளை டிவிட்டரில் சிலர் கடந்த சில நாட்களாக பகிர்ந்து வருகின்றனர்.
இதை தவறு என்று பலரும் கண்டித்தாலும், இதை வேகமாக பரப்பி வருகின்றனர்.
போட்டோவில் இன்பநிதியுடன் இருப்பது அவரின் தோழியா அல்லது காதலியா என்ற விவாதம் வேறு சோஷியல் மீடியாவில் அனல் பறக்க நடந்து வருகிறது. அது உண்மையான போட்டோவா அல்லது போட்டோஷாப்பா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதவியநிதி டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், லவ் பண்ண பயப்படக் கூடாது. அதை வெளிப்படுத்த வேண்டும். இயற்கையின் கருணையால் நடக்கும் நடக்கும் விஷயங்களை புரிந்து கொண்டு, அதன் வழியிலேயே முழுமையாக அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கிருத்திகா உதயநிதியின் இந்த ட்வீட்டிற்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த ட்வீட் அசரவைத்து விட்டது. உங்கள் மீதான மரியாதையும், அன்பும் அதிகமாகி விட்டது. நல்ல மனைவி, நல்ல தாய் என பாராட்டி வருகின்றனர். இனி எந்த போட்டோவை யார் பகிர்ந்தால் என்ன என பலரும் கிருத்திகாவின் ட்விட்டிற்கு மட்டுமல்ல இன்பநிதிக்கும் சேர்த்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இன்பநிதியின் போட்டோவை வைத்து அரசியல் பண்ண நிவைத்தவர்களுக்கு தான் கிருத்திகாவின் ட்வீட் செம அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் போல.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}