உத்திரகாண்டில் கடும் நிலச்சரிவு...பல வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக தகவல்

Jun 29, 2023,04:43 PM IST
டேராடூன் : கனமழை காரணமாக உத்திரகாண்டின் சாமோலி பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

பத்ரிநாத் செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உள்ள பலர் பத்ரிநாத்திற்கு யாத்திரை சென்றவர்கள் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



உத்திரகாண்டின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதோடு ஆரஞ்சு அலர்ட்டும் விடுத்திருந்தது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.

அதிகம் பார்க்கும் செய்திகள்