தேனி எம்.பி தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத்  வெற்றி பெற்றது செல்லாது - ஹைகோர்ட்

Jul 06, 2023,05:28 PM IST
சென்னை:  தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

வழக்கறிஞர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஓ.பி. ரவீந்திரநாத், தனது சொத்துக் கணக்கை சரியாக சமர்ப்பிக்கவில்லை. குறிப்பாக வங்கியில் பெற்ற ரூ. 10 கோடி கடன் குறித்த விவரத்தை தனது வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை. மேலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா நடந்துள்ளது . எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.



இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று கோர்ட் அறிவித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து ஓ.பி. ரவீந்திரநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்செய்யவுள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பை அதுவரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

30 நாட்களுக்குள் தற்போது அப்பீல் செய்ய வேண்டும். அதுவரை  ஓ.பி. ரவீந்திரநாத் பதவிக்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்