"நீலாம்பரி"யாக மாறிய மார்க் சக்கர்பர்க்.. 11 வருடத்துக்குப் பிறகு.. டிவிட்டருக்கு ரிட்டர்ன்!

Jul 06, 2023,11:09 AM IST
கலிபோர்னியா: படையப்பா படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு எப்படி நீலாம்பரி வீட்டை விட்டு வெளியே வந்தாரோ அதேபோல 11 வருட இடைவளிக்குப் பிறகு டிவிட்டர் பக்கம் வந்துள்ளார் பேஸ்புக் நிறுவரான மார்க் சக்கர்பர்க்.

ஒரு காலத்தில் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இல்லாமல் வாழவே முடியாது என்ற அளவுக்கு  மக்கள் அடிமையாகிக் கிடந்தனர்.. இப்போதும் பலர் அப்படித்தான்.. ஆனால் அதையும் தவிர்த்து இருக்க முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர்..அந்த கேட்டகிரியில் மார்க் சக்கர்பர்க்கும் வருகிறார். கிட்டத்தட்ட 11 வருடங்களாக அவர் டிவிட்டர் பக்கமே வரவில்லை. ஒரு டிவீட்  கூட போடவில்லை.



தற்போது அதற்கு பிரேக் விட்டு மீண்டும் டிவிட்டர் பக்கம் வந்துள்ளார் மார்க். ஒரு மீம் ஒன்றை போட்டு அந்த டிவீட்டை பதிவிட்டுள்ளார். இதற்குக் காரணம் உள்ளது.

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா புதிதாக திரெட்ஸ் என்ற ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிவிட்டருக்குப் போட்டியாக கருதப்படுகிறது. இந்த ஆப்பை அறிமுகப்படுத்திய கையோடு இருவர் சண்டை போடுவது போன்ற மீமை டிவீட் செய்து எலான் மஸ்க்கை கலாய்த்துள்ளார் மார்க் சக்கர்பர்க்.  சமீப காலமாக டிவிட்டர் நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு மாற்றங்களால் அதன் பயனாளர்கள் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

ப்ளூ டிக் வேணுமா காசு கொடு.. நீ இவ்வளவு டிவீட்தான் ஒரு நாளைக்குப் பார்க்க முடியும்..  வெரிபைட்னா இவ்வளவு பார்க்கலாம்.. என்று மஸ்க் போட்டு வரும் ரூல்ஸ்களால் மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். இந்த எரிச்சலையே முதலீடாக்கும் திட்டத்தில்தான் திரெட்ஸை அறிமுகப்படுத்துகிறார் மார்க் சக்கர்பர்க். டிவிட்டரால் டர் ஆனவர்கள் திரெட்ஸ் பக்கம் திரண்டு வருவார்கள் என்பது அவரது கணக்கு.

பார்க்கலாம்.. மஸ்க் எடுக்கும் ரிஸ்க்கையெல்லாம் மார்க் ரஸ்க் ஆக்கி சாப்பிடுவாரா அல்லது பின்வாங்கி ஓடுவாரா என்பதை!

சமீபத்திய செய்திகள்

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

news

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்