பாகிஸ்தானில் பரபரப்பு.. இம்ரான் கான் அதிரடி கைது!

May 09, 2023,04:51 PM IST
இஸ்லாமாபாத் : ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கோர்ட் வளாகத்திற்குள் வைத்து துணை ராணுவப் படையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் அல் காதிர் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளை பஹ்ரியா நகரில் உள்ள ரூ.530 மில்லியன் மதிப்பிலான நிலத்தை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அறக்கட்டளை இம்ரான் கான் மற்றும் அவரது மனைவியால் நடத்தப்பட்டு வந்துள்ளது. 



இந்த நில மோசடி உள்ளிட்ட கிட்டதட்ட 100 க்கும் அதிகமான வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட பதிலளிக்கவோ, விசாரணைக்கு ஆஜராகவோ இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து இன்று கோர்ட்டில் ஆஜராவதற்காக லாகூர் இருந்து இஸ்லாமாபாத் வந்த இம்ரான் கானை துணை ராணுவப் படையினர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து கோர்ட் வளாகத்திற்குள் புகுந்து கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் சமீபத்தில் ராணுவம் குறித்து கடுமையாக விமர்சித்து இம்ரான் கான் பேசியதாகவும், இதன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இம்ரான் கானின் கைது, மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இம்ரான் கான் கைது செய்யப்பட்ட போது கோர்ட் வாசலில் பாதுகாப்பு படையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடும் மோதல் நடைபெறற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பும் லாகூர் அவரது வீட்டில் வைத்து இம்ரான் கானை கைது செய்ய முயற்சித்த போதும் மோதல் வெடித்தது.

சமீபத்திய செய்திகள்

news

பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்