என் உயிரை சந்தித்த போது...விஜயகாந்த் கையைப் பிடித்து கொஞ்சி நெகிழ்ந்த எஸ்.ஏ.சி.,

Jan 31, 2023,03:13 PM IST
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி டைரக்டர்களில் ஒருவரும், நடிகரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி சோபா சந்திரசேகருடன் சென்று நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுத்த போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருகமாக கருத்து பதிவிட்டுள்ளார்.



தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினியின் நினைவு வருவதை போல், கேப்டன் என்றாலே நினைவிற்கு வருபவர் விஜயகாந்த். 1980 களில் துவங்கி தமிழ் சினிமாவில் நீங்காத இடம்பிடித்துள்ளனர் விஜயகாந்த். ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சந்திரேசகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. ரஜினி, கமல் டாப் ஹீரோக்களாக இருந்த காலத்திலேயே அவர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த்.  

விஜயகாந்த் சினிமாவில் பிஸியாக இருந்த காலத்திலும் சரி, அவர் அரசியலுக்கு வந்த காலத்திலும் சரி, அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருக்கும் தற்போதைய நிலையில் சரி விஜயகாந்த்திற்கு என்று தனி ரசிகர்க கூட்டமே உள்ளது. விஜயகாந்த்தின் 33 வது திருமண நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மனைவி சோபாவுடன் விஜயகாந்த்தின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்து, வாழ்த்து கூறினார்.



நடக்க முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த்தின் கைகளை பிடித்து, "விஜி... நல்லா இருக்கியா?" என நலம் விசாரித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஏசி, விஜயகாந்த் எனது நீண்ட கால நண்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரை நேரில் வந்து பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் அதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது என தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்ஏசி, என் உயிரை நான் சந்தித்த போது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். எஸ்ஏசி,,யின் இந்த நெகிழ்ச்சிகரமான பதிவிட்டு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

அசுத்தமான குடிநீரால்... தவிக்கும் தென்மாவட்டங்கள்... பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பள்ளி திறக்கப்பட்ட அன்றே மாணவர்களுக்கு நோட் புத்தகம் வழங்க.. அமைச்சர் அன்பில் மகேஷ்‌ அறிவுறுத்தல்!

news

தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல.. அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சியே... விஜய் ஆவேசம்!

news

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்.. வானிலை மையம்

news

சரியான எடைகளில் பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்ய‌.. ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை..!

news

முதல் போட்டியிலேயே இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று.. தமிழக வீரர் செர்வின் அசத்தல்..!

news

திமுகவினரிடம் இருந்து மக்களே தங்களை காத்துக்கொள்ள வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

பள்ளிக்கூடம் போகலாமா.. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!

news

வங்கக்கடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு.. இந்திய வானிலை மையம்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்