டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. 60 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரே நாளில், டெல்லியிலும், மும்பையிலும் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தென் மேற்குப் பருவ மழை ஒவ்வொரு பகுதியாக பெய்ய ஆரம்பித்துள்ளது. கேரளாவில் ஆரம்பித்த பருவ மழை தற்போது டெல்லியிலும், மும்பையிலும் தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நாளில் மழை தொடங்கியதுதான் விசேஷமே.
இதற்கு முன்பு 60 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்படி ஒரே நாளில் இரு நகரங்களிலும் பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்லிக்கு 2 நாட்களுக்கு முன்பே மழை வந்துள்ளது. மும்பையைப் பொறுத்தவரை 2 வாரம் லேட்டாக வந்து சேர்ந்துள்ளது.

தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையிலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. மகாராஷ்டிரா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானாவின் சில பகுதிகள், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்முவின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் மேலும் நல்லமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அந்தேரி, மலட், தஹிசார் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்தினகிரி ஆகிய பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. பால்கார், தானே, மும்பை, சிந்துதுர்க் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}