டெல்லி: டெல்லி மற்றும் மும்பையில் ஒரே நாளில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. 60 வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரே நாளில், டெல்லியிலும், மும்பையிலும் பருவ மழை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தென் மேற்குப் பருவ மழை ஒவ்வொரு பகுதியாக பெய்ய ஆரம்பித்துள்ளது. கேரளாவில் ஆரம்பித்த பருவ மழை தற்போது டெல்லியிலும், மும்பையிலும் தொடங்கியுள்ளது. இரு நகரங்களிலும் ஒரே நாளில் மழை தொடங்கியதுதான் விசேஷமே.
இதற்கு முன்பு 60 ஆண்டுகளுக்கு முன்புதான் இப்படி ஒரே நாளில் இரு நகரங்களிலும் பருவ மழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டெல்லிக்கு 2 நாட்களுக்கு முன்பே மழை வந்துள்ளது. மும்பையைப் பொறுத்தவரை 2 வாரம் லேட்டாக வந்து சேர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையிலும் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. மகாராஷ்டிரா முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோல மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானாவின் சில பகுதிகள், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்முவின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களில் மேலும் நல்லமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அந்தேரி, மலட், தஹிசார் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
மகாராஷ்டிராவின் ராய்காட், ரத்தினகிரி ஆகிய பகுதிகளுக்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. பால்கார், தானே, மும்பை, சிந்துதுர்க் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}