திருப்பதி கோவிலைப் படம் பிடித்த டிரோன் வீடியோ .. தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு

Jan 21, 2023,03:02 PM IST
திருமலை : உலகிலேயே அதிக வருமானம் பெறும் கோவில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில்.  தினமும் 60,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்யும் இக்கோவிலுக்கு கோடி கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட டாப் 10 கோவில்களில் திருப்பதியும் ஒன்று. 



பணக்கார தெய்வம் என பக்தர்களால் கொண்டாடப்படும் ஏழுமலையானை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பலத்த பாதுகாப்பு, பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாக திருப்பதியில் நடைமுறையில் உள்ளன.

ஆனாலும் திருப்பதி ஏழுமலையான் என சொல்லி பல வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக திருப்பதி கோவிலை ட்ரோன் ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வந்தது.

ஆனால் இந்த வீடியோ ட்ரோன் கேமிராவில் எடுக்கப்பட்டது என சொல்லப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது. திருமலை முழுவதும் ஹைஃபை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பின் கழுகு பார்வை கண்காணிப்பில் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த வீடியோ டிரோன் கேமிரா மூலம் எடுக்கப்பட்டிருப்பட்டிருப்பது சாத்தியமற்றது என திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு தலைப்பு அதிகாரி ஸ்ரீ நரசிம்ம கிஷோர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக இதை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஒருவேளை டிரோன் கேமிரா மூலம் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் இந்த வீடியோவை எடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!

news

மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

news

துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் வராதா.. கவலையில் மக்கள்.. கேள்விக் கனை தொடுக்கும் எம்.பிக்கள்

news

மீண்டும் பீகார் முதல்வராகிறார் நிதீஷ் குமார்.. இன்று தேஜகூ சட்டமன்ற தலைவராக தேர்வாகிறார்

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்