திருப்பதி கோவிலைப் படம் பிடித்த டிரோன் வீடியோ .. தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு

Jan 21, 2023,03:02 PM IST
திருமலை : உலகிலேயே அதிக வருமானம் பெறும் கோவில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில்.  தினமும் 60,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்யும் இக்கோவிலுக்கு கோடி கணக்கில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு கொண்ட டாப் 10 கோவில்களில் திருப்பதியும் ஒன்று. 



பணக்கார தெய்வம் என பக்தர்களால் கொண்டாடப்படும் ஏழுமலையானை தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் பலத்த பாதுகாப்பு, பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பக்தர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பல ஆண்டுகளாக திருப்பதியில் நடைமுறையில் உள்ளன.

ஆனாலும் திருப்பதி ஏழுமலையான் என சொல்லி பல வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக திருப்பதி கோவிலை ட்ரோன் ஷாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வைரலாகி வந்தது.

ஆனால் இந்த வீடியோ ட்ரோன் கேமிராவில் எடுக்கப்பட்டது என சொல்லப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது. திருமலை முழுவதும் ஹைஃபை விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பின் கழுகு பார்வை கண்காணிப்பில் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த வீடியோ டிரோன் கேமிரா மூலம் எடுக்கப்பட்டிருப்பட்டிருப்பது சாத்தியமற்றது என திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு தலைப்பு அதிகாரி ஸ்ரீ நரசிம்ம கிஷோர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக இதை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஒருவேளை டிரோன் கேமிரா மூலம் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் இந்த வீடியோவை எடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எங்கே என் .. யாதுமானவன்?

news

விநாயகப் பெருமானை வழிபட்டு.. தடைகள் நீங்கி வெற்றி பெற.. வர சதுர்த்தி!

news

தை மாதத்தில் வசந்தமாகும் பஞ்சமி!

news

ஜெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் இன்று சற்று குறைந்தது... இதோ இன்றைய விலை நிலவரம்!

news

மக்கள் ஆதரவை இழந்து விட்டது திமுக.. அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் - பாஜக

news

தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!

news

முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

news

கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!

news

தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?

அதிகம் பார்க்கும் செய்திகள்