புதுடில்லி : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோவின் இணை நிறுவனர் குஞ்சன் படிடர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜோமாட்டோ நிறுவனத்தின் ஆரம்ப கால பணியாளர்களில் இவரும் ஒருவர். இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
ஐடி நிறுவன ஊழியராக இருந்த குஞ்சன் படிடர், னோமாட்டோவின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாகவும் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோமாட்டோ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவை இவர் தான் கவனித்து வந்தார். இவர் என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்கிறார் என்ற விபரத்தை ஜோமாட்டோ நிறுவனம் வெளியிடவில்லை.

குஞ்சனின் லிங்க்டுஇன் புரொஃபைல் அடிப்படையில் பார்த்தால், ஜோமாட்டோவின் ஒட்டுமொத்த தொழில்நுட்பங்களையும் இவர் தான் கவனித்து வந்துள்ளார். அது மட்டுமல்ல புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான பல புதிய விஷயங்களை உருவாக்கியதும் இவர் தான்.
2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோமாட்டோவில் இணைவதற்கு முன் Cyient நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் டில்லி ஐஐடி.,யில் பி.டெக் டிகிரி முடித்தவர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் இந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான மோஹித் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் மட்டுமல்ல ராகுல் கஞ்ஜூ, சித்தார்த் ஜவஹர், கெளரவ் குப்தா போன்ற முக்கிய உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
ஒரு கடிதம் எழுதினேன்!
"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை
பார்த்த ஞாபகம் இல்லையோ!
டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி
சிந்தனைச் சிதறல்.. கற்பனையில் களிப்பதை விட உள்ளதை ஏற்பதே மகிழ்ச்சி!
பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
{{comments.comment}}