இவங்க கேட்டது வெஜ் பிரியாணி... பட் அவங்களுக்கு கிடைச்சது சிக்கன் பிரியாணி..!

Jul 11, 2023,11:19 AM IST
டெல்லி: வாரணாசியைச் சேர்ந்த ஒரு வெஜிட்டேரியன் குடும்பத்தினர் வெஜிடபிள் பிரியாணிக்கு ஆர்டர் செய்துள்ளனர். ஆனால்  ஹோட்டல்காரர்கள் சிக்கன் பிரியாணியைக் கொடுத்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக சொமாட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக அஸ்வினி ஸ்ரீவாத்சவா என்பவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்தான் இந்த காமெடியை அவர் விவரித்துள்ளார். 



இதுகுறித்து அஸ்வினி ஸ்ரீவாத்சவா கூறுகையில், வாரணாசியில் உள்ள இந்தக் குடும்பத்தினர் வெஜிடபிள் பிரியாணிக்காக ஆர்டர் செய்திருந்தனர். சொமாட்டோ மூலம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. பிரியாணியும் வந்தது. ஆனால் அது வெஜிடபிள் பிரியாணி அல்ல.. மாறாக சிக்கன் பிரியாணி அதில் இருந்தது. இந்தக் குடும்பத்தினர் சுத்தமான வெஜிட்டேரியன் . அசைவம் சாப்பிட்டதே இல்லை. அவர்களை அசைவம் சாப்பிட வைத்து விட்டது இந்த ஹோட்டல்.



அவர்கள் பன்னீர் பிரியாணி என்று நினைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு இது சிக்கன் பிரியாணி என்று கூட தெரியவில்லை. சாப்பிட்ட பிறகுதான் வேறு ஏதோ மாதிரி இருக்கிறதே என்று சந்தேகம் வந்து பார்த்தபோது அது சிக்கன் என்று தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சொமாட்டோ நிறுவனமும், அந்த பிரியாணியை தயாரித்த ஹோட்டலான பெஹரூஸ் ஹோட்டலும் மன்னிப்பு கேட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு...விரைவில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

news

டெலிகிராம் தடைக்கு எதிராக வழக்கு: மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து நிறுவனம் மனு!

news

"யாரைக் காப்பாற்ற இந்த அறிக்கை?" - வெள்ளை அறிக்கை பற்றி தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி

news

ஆலோலம் பாட்டுக் கேட்குதே

news

"கட்சியாக மாறினால் வேற மாதிரி இருப்போம்".. 'We The Leaders' இயக்கம் குறித்து அண்ணாமலை

news

டெலிகிராம் தடையால் 15 கோடி பயனாளர்கள் பாதிப்பு.. CEO பவெல் துரோவ் அதிருப்தி

news

பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பிற்கு எதிர்ப்பு...ஜூன் 22-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

news

Tamil Short Story: எதார்த்தம்!

news

ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்