- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி
பொன் பட்டு பீலி விரித்து
மென் கழுத்து நீண்டு நிமிர்த்து
கொஞ்சும் கொண்டை கொஞ்சி ஆர்த்து
விண் சொரியும் சாரலில் மேனி சிலிர்த்து
ஆனந்தக் கூத்தாடும் அழகு மயில்!
நளினத்தின் இலக்கணம் பெண்மை...
என்ற வரையறையை மாற்றி அமைத்த ஆண் மயில்..
தேசியப்பறவையான என் தேச மயில் !
தரணி போற்றும் தங்க மயில்!!!
பாவலர் பாடிடும் பட்டு மயில் !
நாவலர் நவில்ந்திடும் நல்ல மயில்!

ஒயிலாய் மயக்கும் ஒய்யார மயில் !
சிலுப்பி சிரிக்கும் சிங்கார மயில்!
கோவிலில் குடியிருக்கும் கோல மயில்!
முருகனின் முன்னிருக்கும் முத்து மயில் !
கவி பாட வரி கொடுத்த என் கானமயில்...
பொன் கானமயில்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
{{comments.comment}}