என் முற்றம் நீ .. உன்னை தினம் தினம் பார்க்கத் துடிக்கும் .. தேன் நிலவாக .. நான்!

Mar 19, 2025,04:49 PM IST

- தேவி


மயங்கிய விழிகள் 

உருக ஆரம்பித்தது 

உருகிய இதயம் 

உறைய ஆரம்பித்தது 

உறைந்த நிமிடங்கள் 

இளக ஆரம்பித்தது 

தெளிந்த பார்வைகள் 

தீண்டத் தொடங்கியது 

அவளது அனல் பார்வையை....

முகத்தில் தெறித்த முகவரியில்

தெறித்து வந்த இதய ராகம்

கொடுத்த வரியை 

இழுத்து பிடித்தேன் 

அடுத்த அடியை 

மறைத்து உரைத்தேன் இனிது இனிது....




இளமையின் ஊஞ்சலாய் 

இனிமையின் தென்றலாய் 

இயற்கையின் இலக்கணமாய்

இசையின்  ஓவியமாய் 

தமிழ் மொழியின் ஆழமாய் 

தாலாட்டு பாடும் 

தாயின் காவியமாய் 

கவிதை கடலை அமுதென பருகும் 

கவிதையின் வைரமுத்தாய் 

தழைத்து தெளித்து இனித்து 

இசைத்து திளைத்து

திகைத்து உரைத்து 

உருவம் ஆகின்றாய்

உன் அருகில்


இமயமாக நீ 

அதில் ஒளிந்திருக்கும் 

புகைமூட்டமாக 

நான்......

வடிவமாக நீ 

அதில் கலந்திருக்கும்  

ஓவியமாக 

நான்.... 

தென்றலாக நீ 

அதில் மறைந்திருக்கும் 

வாசமாக 

நான்.....

வானமாக நீ 

அதில் கலைந்திருக்கும்  

மேகமாக 

நான்..... 

மூச்சுக்காற்றாக நீ 

அதில் உறைந்திருக்கும் 

அனலாக 

நான்.....

பௌர்ணமியாக நீ 

அதில் மறைந்திருக்கும் 

விண்மீனாக 

நான்..

வானவில்லின் வண்ணமாக 

நீ 

அதை எண்ணும் கண்களாக

நான்.... 

மழைத்துளியின் சிதறலாக

நீ 

அதில் நனையும் பனித்துளியாக 

நான்

பூக்கும் பூக்களின் வண்ணமாக 

நீ 

அதில் தேன் எடுக்கும் 

வண்டாக 

நான்...... 

பறக்கும் பறவையின் வானமாக 

நீ 

அதில் மிதக்கும்

காற்றின் வேகமாக 

நான்....

பருவம் மாறும் இயற்கையாக 

நீ 

அதில் திளைத்தும் மலரும் 

மனிதனாக 

நான்




கூவும் குயிலின் ஓசையாக

நீ 

உன்னை ரசித்து பருகும் 

காற்றின் அலையாக    

நான்....

கடற்கரையின் எல்லையாக 

நீ 

உன்னில் பிறப்பெடுக்கும் 

அலையாக

நான்......

ஆலமரத்தின் வேராக 

நீ

உன்னில் ஊஞ்சலாடும் 

குழந்தையாக 

நான்

மேகங்களை இழுத்து  செல்லும் காற்றாக 

நீ 

உன்னை கரம் பிடிக்கும் 

பறவைக் கூட்டமாக 

நான்....

காய்ந்து விலகும் மர இலையாக  

நீ 

உன்னை தாங்கிப் பிடிக்கும்

தாய் மண்ணாக 

நான்....

வீட்டின் துளசி மடமாக 

நீ

உன்னை அலங்கரிக்கும் 

வண்ண மலராக 

நான்

காதலின் கருவிழியாக  

நீ

உன்னை அலங்கரிக்கும் 

காஜலின் புள்ளியாக  

நான்...!

முத்தமிடும் இதழின் வண்ணமாக  

நீ

உன்னில் தவழும் 

பனித்துளியின்  கோடுகளாக 

நான்

கோடை வெயிலின் மழையாக 

நீ

உன்னை கொஞ்சி வரவேற்கும் 

அனல் காற்றாக 

நான்....

பூந்தொட்டியின் சிரிக்கும் பூக்களாக

நீ

உன்னுள் பிறந்து உதிக்கும் 

கனவாக 

நான்.....

வீட்டின் முற்றமாக 

நீ 

உன்னை தினம் தினம் பார்க்கத் துடிக்கும் 

தேன் நிலவாக 

நான்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்