"இந்தாங்க டீச்சர் பூ".. சிறுகதை

Jan 08, 2026,09:56 AM IST
- க.முருகேஸ்வரி

மகளிர் தினக் காலை அது. வகுப்பறைக்குள் நுழைந்தபோதே என் மனதிற்குள் ஒரு மெல்லிய பிடிவாதம் இருந்தது. காரணம், தர்ஷன். அவன் செய்த ஏதோ ஒரு குறும்பு என் கோபத்தைத் தூண்டியிருந்தது. ஆனால் அது உண்மையான கோபம் அல்ல; அவனைத் நல்வழிப்படுத்த நான் அணிந்துகொண்ட 'பொய்க்கோப' முகமூடி.

அன்று முழுவதும் அவனைப் பார்க்காமல், அவனிடம் பேசாமல் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் தர்ஷன் விடுவதாக இல்லை. என் மேஜையைச் சுற்றிச் சுற்றி வந்தவன், இடைவிடாமல் ஒன்றைச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

"மிஸ்... உங்களுக்குத்தான் பூ கொண்டு வந்திருக்கேன். வச்சுக்கோங்க மிஸ்... ப்ளீஸ் வச்சுக்கோங்க!"



அவன் சொல்லும்போதெல்லாம் என் கண்கள் அங்கும் இங்கும் தேடின. அவன் கையில் பூ இல்லை, பையிலும் இல்லை. 'எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்?' என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், வெளியே கோபமாக இருப்பது போலவே காட்டிக்கொண்டேன்.

மணி பதினொன்றைத் தொட்டது. மீண்டும் அதே குரல், "மிஸ்... பூவ வச்சுக்கோங்க மிஸ்!"

இறுதியில் என் மௌனத்தைக் கலைத்தேன். "எங்கடா இருக்கு பூ? எப்போ பாரு பூ பூ-ன்னு சொல்லிட்டே இருக்க, கண்ணுக்கே தெரியலையே?" என்று சற்று அதட்டலாகக் கேட்டேன்.

உடனே அவன் தன் மேஜை மீது இருந்த ஒரு பிளாஸ்டிக் டம்ளரைக் காண்பித்தான். அதற்குள் இதழ் விரித்துச் சிரித்துக் கொண்டிருந்தன சிவப்பு நிறச் செம்பருத்திப் பூக்கள். தண்ணீருக்குள் மிதந்தபடி ஒரு டம்ளர் நிறைய அன்பை எனக்காகச் சேமித்து வைத்திருந்தான்.

"இதோ மிஸ்... இது உங்களுக்குத்தான்!" - அவன் கண்களில் இருந்த அந்தத் தெளிவும் எதிர்பார்ப்பும் என் பொய்க்கோபத்தை அப்படியே கரைத்துவிட்டது.

'அடப்பாவி... இதை எப்படிடா நான் தலையில் வைப்பது?' என்று மனதிற்குள் நினைத்துச் சிரித்துக்கொண்டேன். ஆனால், அவன் கொண்டு வந்த அந்த அன்பின் கனம் எனக்குப் புரிந்தது.

"எனக்காகத்தானே கொண்டு வந்த? சரி, என் கையிலேயே கொடு," என்று நான் கையை நீட்ட, அடுத்த நொடியே அவன் முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தில் பிரகாசித்தது. மிகுந்த குஷியுடன் அந்தப் பூக்களை எடுத்து என் கையில் கொடுத்தான்.

அன்று எத்தனையோ வாழ்த்துகள் வந்திருக்கலாம், ஆனால் ஒரு குழந்தையின் கள்ளமில்லாத இந்த அன்புப் பரிசை விடச் சிறந்த ஒன்றை யாரால் கொடுத்துவிட முடியும்?

நிச்சயமாக, குழந்தைகள் இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பப்பட்ட தேவதைகள்!

(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்

news

இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு

news

ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்

news

மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

ஜனநாயகன் ரிலீசை தடுத்தது பாஜக.,வும், திமுக.,வும் தான்...ஆதவ் அர்ஜூனா பகிரங்க குற்றச்சாட்டு

news

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு: 3-வது மொழிப்பாட வகுப்புகளை உடனடியாகத் தொடங்க அறிவுறுத்தல்

news

ஒரு முடிவா… அல்லது ஒரு தொடக்கமா?.. மனிதன், இயந்திரம், மற்றும் எதிர்காலத்தின் தேர்வு (10)

news

National Siblings Day: ஒரு கூட்டுக் கிளியாக.. இன்று உடன் பிறப்புகள் தினம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்