சொல்லுங்களேன் சொல்லுங்களேன்
இறைவனின் கடிதத்தில் மானிடச் செல்வங்களே
நலம் நலம் அறிய ஆவல்
தாயையும் தந்தையையும் உருவாக்கி
பேரன்பு கொண்ட சுற்றத்தையும் சொந்தமாக்கி
மனித நேயத்தை மாண்புற வளர்த்து
மதிப்பு மிக்க சமுதாயத்தில்
ஓங்கிய மலையும் ஓடிவரும் அருவியும்
பாதுகாக்கும் பெருங்கடலும்
பச்சை பசுமையாய் கானகமும் காடும் கரையும்
வீசுகின்ற தென்றலில்
வாசமிகு மலர்களின் வணப்பும்
உன் கையில் ஒப்படைத்துச் சென்றேனே
அதன் நலம் நலம் அறிய ஆவல்
ஆனால் செவியுற்றதெல்லாம் கேட்டபோது
ஆதங்கத்தின் வெளிப்பாடு இக்கடிதம்
மனிதநேயம் மறந்து போனதாம்
அன்புமிக்க மழலைகளை அரவணைக்க கரங்கள் இல்லையாம்
தோள் தாங்கிய தந்தையும்
வன்கொடுமை கொடூரன் ஆனானாம்
சுயநல தேவைக்கு பலிகடா ஆக்கினாளாம்
பத்து மாதம் சுமந்து எடுத்த தாய்
கலாச்சாரம் பண்பாடும்
பாகுபாடுகளும் பிரிவுகளும் பல பல
ஒன்று பட்ட சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில்
வேற்றுமை எனும் அரக்கன் தொற்றாய் இடையில் வந்து விட்டான் என்று!
நல்லோர்களை உருவாக்கிய
நற்காவியங்கள் நான் தந்து
நன்றும் தீதும் கற்று தந்ததெல்லாம்
வீழ்ந்து போனதேன்?
மனிதம் வீழ்ந்து
மானுட அழிவும்
இயற்கை அழிவும்
உங்களைத் தாக்க..
படைத்தவனின் மனம் வேதனை கொள்கிறதே
எனதருமை மானிடா
எப்பொழுது எனக்கு எழுதப் போகிறாய்?
"மனிதநேயம் மலர்ந்து விட்டது
மானுடத்தில் பேதமில்லை
வக்கிரம் எல்லாம் ஒழிந்து
வண்ண வண்ண சமுதாயம் வளர்ந்து வருகிறது
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
வாருங்கள் எம் புவியை காண" என்று!
கவிதை:
இ.அங்கயற்கண்ணி (M.sc, M.A, B.Ed)
முன்னாள் ஆசிரியர்
நெய்வேலி
காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை உருவாகிறது..எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? வானிலை மையம் தகவல்!
ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்.. கொரோனா காலத்தில் திறம்பட பணியாற்றியவர்!
3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!
விஜய் செய்வது வெறுப்பு அரசியல்... மக்களிடம் அது எடுபடாது: திருமாவளவன்
குடியாத்தம் அருகே மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு!
பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு
வானத்தில் கார்மேகமாய் நீயே.. கண்ணா!!!
{{comments.comment}}