சொல்லுங்களேன் சொல்லுங்களேன்
இறைவனின் கடிதத்தில் மானிடச் செல்வங்களே
நலம் நலம் அறிய ஆவல்
தாயையும் தந்தையையும் உருவாக்கி
பேரன்பு கொண்ட சுற்றத்தையும் சொந்தமாக்கி
மனித நேயத்தை மாண்புற வளர்த்து
மதிப்பு மிக்க சமுதாயத்தில்
ஓங்கிய மலையும் ஓடிவரும் அருவியும்
பாதுகாக்கும் பெருங்கடலும்
பச்சை பசுமையாய் கானகமும் காடும் கரையும்
வீசுகின்ற தென்றலில்
வாசமிகு மலர்களின் வணப்பும்
உன் கையில் ஒப்படைத்துச் சென்றேனே
அதன் நலம் நலம் அறிய ஆவல்
ஆனால் செவியுற்றதெல்லாம் கேட்டபோது
ஆதங்கத்தின் வெளிப்பாடு இக்கடிதம்
மனிதநேயம் மறந்து போனதாம்
அன்புமிக்க மழலைகளை அரவணைக்க கரங்கள் இல்லையாம்
தோள் தாங்கிய தந்தையும்
வன்கொடுமை கொடூரன் ஆனானாம்
சுயநல தேவைக்கு பலிகடா ஆக்கினாளாம்
பத்து மாதம் சுமந்து எடுத்த தாய்
கலாச்சாரம் பண்பாடும்
பாகுபாடுகளும் பிரிவுகளும் பல பல
ஒன்று பட்ட சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில்
வேற்றுமை எனும் அரக்கன் தொற்றாய் இடையில் வந்து விட்டான் என்று!
நல்லோர்களை உருவாக்கிய
நற்காவியங்கள் நான் தந்து
நன்றும் தீதும் கற்று தந்ததெல்லாம்
வீழ்ந்து போனதேன்?
மனிதம் வீழ்ந்து
மானுட அழிவும்
இயற்கை அழிவும்
உங்களைத் தாக்க..
படைத்தவனின் மனம் வேதனை கொள்கிறதே
எனதருமை மானிடா
எப்பொழுது எனக்கு எழுதப் போகிறாய்?
"மனிதநேயம் மலர்ந்து விட்டது
மானுடத்தில் பேதமில்லை
வக்கிரம் எல்லாம் ஒழிந்து
வண்ண வண்ண சமுதாயம் வளர்ந்து வருகிறது
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
வாருங்கள் எம் புவியை காண" என்று!
கவிதை:
இ.அங்கயற்கண்ணி (M.sc, M.A, B.Ed)
முன்னாள் ஆசிரியர்
நெய்வேலி
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்