- க. முருகேஸ்வரி
ஹாரன் சத்தம் கேட்கும் போதே.....
ஹார்ட் பீட்டும் அதிகரிக்கும் .....
தினமும் ஏறும் பஸ் தான், எனினும் ....
திடீரென்று ஏன் இந்த மாற்றம்??????
ஏறும்போது படபடப்பு .....
லேசாய் ஏனோ கிறுகிறுப்பு .....
வெளியில் எதுவும் காட்டாமல் .....
வீம்பாய் என்னுள் வீராப்பு.......

இப்போது தான் ஒலிக்க வேண்டுமா ?
அந்தப் பாடல்........
வளையோசை கலகலகலவென......
ஒவ்வொரு நாளும் ஒரு யுத்தம் ......
உன்னை சந்தித்த நாள் முதல் நித்தம்........
நீ பார்ப்பதை என் தோழியும்......
பார்வை படாமல் நான் மறைவதை........
உன் நட்புகளும் எள்ளி நகைக்க......
நாணம் வந்து ஒட்டிக்கொள்ள......
இனம் புரியாய் ஏக்கம் .....
கண்களாலே காதல் மொழி......
மௌனத்தின் மொழிக்கு.....
இவ்வளவு வலிமையா.....
அரை மணி நேரத்தில்......
அவ்வளவு உணர்ச்சிகள்......
அடுக்கடுக்காய் வந்து போகும் .......
விரல் கூட படவில்லை......
வெட்கம் மட்டும் ஏனோ விடவில்லை.......
இறங்கும் வரை நிமிரவில்லை.......
இறங்கிய பின் திரும்பி பார்த்து ......
ஒரு தெனாவட்டு சிரிப்பு......
எத்தனை நாள் இந்த நாடகம்????
இது காதல் என்னும் கபட நாடகம்!
(க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வயலாநல்லூர், பூவிருந்தவல்லி)
தாய்ப் பிரிவின் ஏக்கம்
திருவதிகை விரட்டாணம் சன்னதியில் உருவான திருநாவுக்கரசர்!
இன்பத் தமிழே என் இயக்கம் நீயே
சிந்தனைச் சிதறல்.. சுமை என நினைக்கையில் சுகத்தினைத் தொலைக்கிறோம்!
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
மாற்றுத்திறனாளிகள்..கட்டணச்சலுகைஇல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்
{{comments.comment}}