- தெ.நாராயண லெட்சுமி, B.E
மழைன்னா சில பேருக்கு ரோடு ஜாம், சிரமம், வேலைக்கு லேட்… அப்படித்தான் தோணும்.
ஆனா சில நேரங்களில் அந்த மழையே நமக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை தரும்.
இந்த நாளும் எங்களுக்கு அப்படித்தான். வானம் முழுக்க மேகங்கள், ரோட்டுல மழை துளிகள் சின்ன சின்ன முத்து மாதிரி விழுந்துகிட்டு இருந்தது.
கார்ல போய்க்கிட்டே இருக்கும்போது ஜன்னலுக்கு மேல விழும் மழை துளிகளை பாத்தா ஒரு தனி சந்தோஷம்.
அதுக்குள் ஒரு இடத்தில் நின்னு சூடான டீ மற்றும் காபி குடிச்சோம்.
மழை வெளியே கொட்டிக்கிட்டு இருந்தது… கையில் சூடான டீ கப்… அந்த நேரம் வந்த அமைதி, அந்த சின்ன சின்ன சிரிப்புகள் – இதெல்லாம் தான் வாழ்க்கைன்னு தோணும்.

பசங்ககளுக்கு மழை பார்த்தா இன்னும் அதிகமான குஷி. அவர்களுக்கு மழைன்னா வெறும் தண்ணீர் இல்ல; அது ஒரு விளையாட்டு, ஒரு சந்தோஷம். அவர்கள் சிரிப்பு தான் இந்த நாளை இன்னும் அழகாக மாற்றியது.
அந்த மழை நம்ம பயணத்தை நிறுத்தல. அதுக்கு பதிலா அந்த பயணத்தை இன்னும் அழகான நினைவாக மாற்றிவிட்டது. .
சில நாட்கள் அப்படித்தான் – சூரிய ஒளி இல்லாம இருந்தாலும், நம்ம மனசு முழுக்க ஒளியால் நிறைந்திருக்கும்.
மழை வந்து போயிடும்… ஆனா அந்த மழை கொடுத்த நினைவுகள் மட்டும் எப்போதும் நனைந்தபடியே இருக்கும்.
“மழையோடு சேர்ந்து பயணித்தால், ஒவ்வொரு பாதையும் அழகாக தெரியும்.”
(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)
Rajninkanth Clarification: விஜய் மீது எனக்குப் பொறாமை இல்லை.. நான் தரங்கெட்டவன் இல்லை.. ரஜினிகாந்த்
இந்தியா திரும்பி வரும் சோழர் காலத்து செப்பேடுகள்.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!
கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...
சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?
{{comments.comment}}