- கோ.அறிவுசெல்வி இராஜாராம்
கார்கால கண்ணா!
கார்மேகவண்ணா!
காலமெல்லாம் காத்திருப்பேனுன்
காலடியே தஞ்சமென
காசினியிலே! காகுத்தனே!
காட்சியானாய் காவியமுமானாய்
காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!

தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி
தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே
தாம்பினால் கட்டுண்ட கள்வனே
தாமரை கண்ணனே
கொட்டாய் சப்பாணி
தேவகி சிங்கமே
கொட்டாய் சப்பாணி
பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக
தஞ்சமென வந்துன்னையே தொழுதோம்
சஞ்சலமில்லை உன் விழியிலே
அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே
விண்மண் அளந்தானை
விருந்தாவனத்தில் கண்டோமே
உறிவெண்ணெய் திருடிய கள்வனை
ஆய்ப்பாடியில் கண்டோமே
கோபியர் துயில் எடுத்து
குருந்தையேறிய கண்ணனை
நல்கோ நகரிலே கண்டோமே
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
வாடும் மனம் வாசம் பெறும் அம்மா சொல்லும் ஒரு சொல்லில்...!
CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
{{comments.comment}}