தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி.. விழி பிதுங்கி நீ நின்ற நிலை!

Nov 29, 2025,11:31 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


கார்கால கண்ணா!

கார்மேகவண்ணா!

காலமெல்லாம் காத்திருப்பேனுன் 

காலடியே தஞ்சமென

காசினியிலே! காகுத்தனே!

காட்சியானாய் காவியமுமானாய் 

காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!




தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி 

விழிபிதிங்கி நீ நின்றநிலை 

விண்ணோரும் விழி அதிர்ந்தனரே 

தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே 

தாம்பினால் கட்டுண்ட கள்வனே 

தாமரை கண்ணனே 

கொட்டாய் சப்பாணி 

தேவகி சிங்கமே 

கொட்டாய் சப்பாணி


பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக 

தஞ்சமென வந்துன்னையே தொழுதோம் 

சஞ்சலமில்லை உன் விழியிலே 

அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே


விண்மண் அளந்தானை 

விருந்தாவனத்தில் கண்டோமே 

உறிவெண்ணெய் திருடிய கள்வனை 

ஆய்ப்பாடியில் கண்டோமே 

கோபியர் துயில் எடுத்து

குருந்தையேறிய கண்ணனை 

நல்கோ நகரிலே கண்டோமே


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

சந்தோஷம்!

news

நம்பிக்கை அதானே எல்லாம்!

news

அன்பு மகிழ்ச்சியைப் பரப்பும் ஹோலி.. Bonfire of Unity: India’s Vibrant Celebration

அதிகம் பார்க்கும் செய்திகள்