- கோ.அறிவுசெல்வி இராஜாராம்
கார்கால கண்ணா!
கார்மேகவண்ணா!
காலமெல்லாம் காத்திருப்பேனுன்
காலடியே தஞ்சமென
காசினியிலே! காகுத்தனே!
காட்சியானாய் காவியமுமானாய்
காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!

தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி
தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே
தாம்பினால் கட்டுண்ட கள்வனே
தாமரை கண்ணனே
கொட்டாய் சப்பாணி
தேவகி சிங்கமே
கொட்டாய் சப்பாணி
பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக
தஞ்சமென வந்துன்னையே தொழுதோம்
சஞ்சலமில்லை உன் விழியிலே
அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே
விண்மண் அளந்தானை
விருந்தாவனத்தில் கண்டோமே
உறிவெண்ணெய் திருடிய கள்வனை
ஆய்ப்பாடியில் கண்டோமே
கோபியர் துயில் எடுத்து
குருந்தையேறிய கண்ணனை
நல்கோ நகரிலே கண்டோமே
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}