தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி.. விழி பிதுங்கி நீ நின்ற நிலை!

Nov 29, 2025,11:31 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


கார்கால கண்ணா!

கார்மேகவண்ணா!

காலமெல்லாம் காத்திருப்பேனுன் 

காலடியே தஞ்சமென

காசினியிலே! காகுத்தனே!

காட்சியானாய் காவியமுமானாய் 

காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!




தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி 

விழிபிதிங்கி நீ நின்றநிலை 

விண்ணோரும் விழி அதிர்ந்தனரே 

தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே 

தாம்பினால் கட்டுண்ட கள்வனே 

தாமரை கண்ணனே 

கொட்டாய் சப்பாணி 

தேவகி சிங்கமே 

கொட்டாய் சப்பாணி


பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக 

தஞ்சமென வந்துன்னையே தொழுதோம் 

சஞ்சலமில்லை உன் விழியிலே 

அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே


விண்மண் அளந்தானை 

விருந்தாவனத்தில் கண்டோமே 

உறிவெண்ணெய் திருடிய கள்வனை 

ஆய்ப்பாடியில் கண்டோமே 

கோபியர் துயில் எடுத்து

குருந்தையேறிய கண்ணனை 

நல்கோ நகரிலே கண்டோமே


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

news

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை புறக்கணித்த 30 உறுப்பினர்கள்

news

பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு

news

பல ஆயிரம் கோடி லஞ்சம்... இது தான் திமுக அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள்: அண்ணாமலை

news

கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்

news

கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

news

நெற்றிக்கண் திறப்பினும்....!

news

வசந்த பஞ்சமி 2026.. சரஸ்வதி தேவியை வழிபடுவோம்.. ஞானம் பெறுவோம்

news

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்