- கோ.அறிவுசெல்வி இராஜாராம்
கார்கால கண்ணா!
கார்மேகவண்ணா!
காலமெல்லாம் காத்திருப்பேனுன்
காலடியே தஞ்சமென
காசினியிலே! காகுத்தனே!
காட்சியானாய் காவியமுமானாய்
காருணிகனே காவேரியின் காயாம்பூவானவனே!

தயிர் மோர் வெண்ணெய் உருட்டி விழுங்கி
தாமோ தவழ்ந்து யோகுதுயில் துயின்றாயே
தாம்பினால் கட்டுண்ட கள்வனே
தாமரை கண்ணனே
கொட்டாய் சப்பாணி
தேவகி சிங்கமே
கொட்டாய் சப்பாணி
பஞ்சமியிலே உதித்த உத்தமியே வருக வருக
தஞ்சமென வந்துன்னையே தொழுதோம்
சஞ்சலமில்லை உன் விழியிலே
அஞ்சலென நின் திருவடி வணங்குகிறோம் தாயே
விண்மண் அளந்தானை
விருந்தாவனத்தில் கண்டோமே
உறிவெண்ணெய் திருடிய கள்வனை
ஆய்ப்பாடியில் கண்டோமே
கோபியர் துயில் எடுத்து
குருந்தையேறிய கண்ணனை
நல்கோ நகரிலே கண்டோமே
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}