- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்
சாயகொண்டை அசைய மகரகுண்டலம் மின்னிட வந்திடுவான்
பன்னொன்று வேன்குழல் ஊதியே உள்ளம் பரவசமாக்கிடுவான்
இந்த மண்ணில் யாவரும் மயங்கியே உள்ளம் நர்த்தனம் புரிந்திடுவான்
கோவிந்த க்ருஷ்ணா கோபால கிருஷ்ண கோவிந்த கோவிந்த கோபால கிருஷ்ணா
கோவிந்த ராதே கோபால ராதே கோவிந்த கோவிந்த கோபால ராதே.
--

பூவிரித்த
சோலைதனில்
பூத்த
புது மலரே...
காவிரித்த
கானகத்தில்
வாழும்
வனமலரே...
தேவிரித்த
மலர் மகளே
ஆகத்தின்
இணைமலரே
பாவிரித்துப்
பாடுகிறோம்
ஏற்றருள்வாய்
பதமலரே
--
இருள்தரும் மாகடலிலே ஒளிதரும் ஓம்காரமே!
ஓய்வில்லா அலைகடலாக.. அடியோங்களின் ஆத்மா நாரணனுக்கே உரியதென உய்யவழிக்கற்பிக்கும் உயரிய செம்பொருளே கலியுக காரிமாறனே!
தலையல்லால் கைமாறறியேன் அடியேன்
ஓம்ஹரி ஸ்ரீ ஹரி நரஹரி முரஹரி முகுந்தமுராரே
கோபாலஹரி கோவிந்தஹரி கோகுலஹரி கோவில்வாழம் கோபாலகோளரி அடியார்கள் மனமதிலே ஹரி நீ நீங்காமல் நிறைந்தாயே ஹரி
--

இளங்கண்ணன்
இளந்தயிர்
இளம் வெண்ணெய் களவாடி
இளமாயரிடம் மத்தடிபட்டு இளங்கோபியருடன்
இராசலீலை புரிந்து
இன்முகம் காட்டி
இடைச்சியர் இதயம் இலகுவாக கவர்ந்த இடையன் இவனொருவனே
இளஞ்சிங்க இளவல் இராமன்
--
செங்கமலபோதகத்தின் கோலமுத்தம் வேண்டினாற்போல்
அணிகொள் முகம் வியர்ப்ப குறும்புசெய்து நிலாமுற்றத்தூடே
திருமேனி தூசுபடர்ந்து திரியவேண்டா அம்மவிம்ம வானவர்க்கு அமுதளித்த தேவத்தலைவா முலையுணாயே
--
ஓடியாடி வருகிறான் ஓம்காரனே
பாடிப்பாடி வருகின்றான் பத்பநாபன்
ஆடியாடி வருகின்றான் ஆராவமுதன்
அசைந்துசைந்து வருகிறான் கலிவரதனே
வரமருளவே வருகிறான் பெருஞ்தேவியுடன் வரதன்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}