- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
கிங்கினி நாதம் கல்கல் என ஒலித்திட கண்ணன் நடந்திடுவான்
சாயகொண்டை அசைய மகரகுண்டலம் மின்னிட வந்திடுவான்
பன்னொன்று வேன்குழல் ஊதியே உள்ளம் பரவசமாக்கிடுவான்
இந்த மண்ணில் யாவரும் மயங்கியே உள்ளம் நர்த்தனம் புரிந்திடுவான்
கோவிந்த க்ருஷ்ணா கோபால கிருஷ்ண கோவிந்த கோவிந்த கோபால கிருஷ்ணா
கோவிந்த ராதே கோபால ராதே கோவிந்த கோவிந்த கோபால ராதே.
--

பூவிரித்த
சோலைதனில்
பூத்த
புது மலரே...
காவிரித்த
கானகத்தில்
வாழும்
வனமலரே...
தேவிரித்த
மலர் மகளே
ஆகத்தின்
இணைமலரே
பாவிரித்துப்
பாடுகிறோம்
ஏற்றருள்வாய்
பதமலரே
--
இருள்தரும் மாகடலிலே ஒளிதரும் ஓம்காரமே!
ஓய்வில்லா அலைகடலாக.. அடியோங்களின் ஆத்மா நாரணனுக்கே உரியதென உய்யவழிக்கற்பிக்கும் உயரிய செம்பொருளே கலியுக காரிமாறனே!
தலையல்லால் கைமாறறியேன் அடியேன்
ஓம்ஹரி ஸ்ரீ ஹரி நரஹரி முரஹரி முகுந்தமுராரே
கோபாலஹரி கோவிந்தஹரி கோகுலஹரி கோவில்வாழம் கோபாலகோளரி அடியார்கள் மனமதிலே ஹரி நீ நீங்காமல் நிறைந்தாயே ஹரி
--

இளங்கண்ணன்
இளந்தயிர்
இளம் வெண்ணெய் களவாடி
இளமாயரிடம் மத்தடிபட்டு இளங்கோபியருடன்
இராசலீலை புரிந்து
இன்முகம் காட்டி
இடைச்சியர் இதயம் இலகுவாக கவர்ந்த இடையன் இவனொருவனே
இளஞ்சிங்க இளவல் இராமன்
--
செங்கமலபோதகத்தின் கோலமுத்தம் வேண்டினாற்போல்
அணிகொள் முகம் வியர்ப்ப குறும்புசெய்து நிலாமுற்றத்தூடே
திருமேனி தூசுபடர்ந்து திரியவேண்டா அம்மவிம்ம வானவர்க்கு அமுதளித்த தேவத்தலைவா முலையுணாயே
--
ஓடியாடி வருகிறான் ஓம்காரனே
பாடிப்பாடி வருகின்றான் பத்பநாபன்
ஆடியாடி வருகின்றான் ஆராவமுதன்
அசைந்துசைந்து வருகிறான் கலிவரதனே
வரமருளவே வருகிறான் பெருஞ்தேவியுடன் வரதன்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}