- தமிழ்மாமணி கவிஞர் இரா.கலைச்செல்வி
உண்மை என்னும் அஸ்திவாரம் இட்டு ,
உழைப்பு என்னும் செங்கற்களை அடுக்கி,
உலக வாழ்க்கை என்னும் வீட்டினை கட்டி,
உயர்ந்து வாழ்வோம் ஒவ்வொரு நாளும்.
உண்மையின் வெளிச்சம் நமக்கு வழிகாட்டும் ..!!
உழைப்பின் வெற்றி நமக்கு மகிழ்வுட்டும்..!!
உழைப்பு உன்னை அழைத்துச் செல்லும் உயரே ..!!
உயர்வு உனக்காக காத்திருக்கும் தனியே ..!!
பொய்யும் புரட்டும் உனக்கு வேண்டாம்..!!
எளிதாக கிடைக்கும் புகழும் வேண்டாம் .!!
ஏமாற்றிப் பெறும் வாழ்க்கையும் வேண்டாம் .!!
உழைப்பின் மீது நம்பிக்கை வை. வெற்றி நிச்சயம் ..!!

சிறு துளி கூட பெரு வெள்ளம் ஆகும் ..!!
சிறு முயற்சிகூட பெரும் வெற்றியாகும் ..!!
நம்பிக்கையோடு உழைத்திடு தோழா..!!
நல்வாழ்வு உனக்காக காத்திருக்கும் தோழா..!!
சோர்வின்றி உழைத்து சோம்பலை விரட்டு..!!
வெற்றியின் கனியை சுவைத்து மகிழ்ந்திடு..!!
உண்மை உழைப்பால் உயர்ந்து வளர்ந்திடு..!!
வாழ்வினில் நிம்மதி பெற்று வாழ்ந்திடு..!!
முயற்சி என்னும் மந்திரத்தால் ..!!
முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை. .!!
ஒவ்வொரு தொழிலும் உயர்ந்த தொழிலே.!!
உழைப்பின் உயர்வை என்றும் போற்றுவோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
 
                                                                            இன்றைக்கு மழை வருமா வராதா? எங்கெல்லாம் மழை வரும்... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
 
                                                                            எடப்பாடி பழனிச்சாமி தான் எங்கள் எதிரி.. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஒன்றிணைந்து பகிரங்க பேட்டி
 
                                                                            கரூர் அதிர்ச்சியிலிருந்து மீண்டுட்டாரா விஜய்.. சிறப்பு பொதுக்குழுவால்.. தொண்டர்களிடையே உற்சாகம்
 
                                                                            பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
 
                                                                            இந்தியாவில்.. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பெண் பிரதிநிதிகள்.. பி.வில்சன் பெருமிதம்
 
                                                                            திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி: நயினார் நகேந்திரன் வேதனை!
 
                                                                            தேவர் ஜெயந்தி விழா... முத்துராமலிங்க தேவருக்கு மனமார்ந்த அஞ்சலி: பிரதமர் மோடியின் பதிவு!
 
                                                                            சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்
 
                                                                            கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது திமுக அரசு: அண்ணாமலை
{{comments.comment}}