உழைப்பின் உயர்வு (கவிதை)

Jul 26, 2025,03:53 PM IST

- தமிழ்மாமணி கவிஞர் இரா.கலைச்செல்வி


உண்மை என்னும் அஸ்திவாரம் இட்டு ,

உழைப்பு என்னும் செங்கற்களை அடுக்கி,

உலக வாழ்க்கை என்னும் வீட்டினை கட்டி,

 உயர்ந்து வாழ்வோம் ஒவ்வொரு நாளும்.


உண்மையின்  வெளிச்சம் நமக்கு வழிகாட்டும் ..!!

உழைப்பின் வெற்றி நமக்கு  மகிழ்வுட்டும்..!!

உழைப்பு  உன்னை  அழைத்துச் செல்லும் உயரே ..!!

உயர்வு உனக்காக காத்திருக்கும் தனியே ..!!


பொய்யும் புரட்டும் உனக்கு வேண்டாம்..!!

எளிதாக கிடைக்கும் புகழும் வேண்டாம் .!!

ஏமாற்றிப் பெறும் வாழ்க்கையும் வேண்டாம் .!!

உழைப்பின் மீது நம்பிக்கை வை. வெற்றி நிச்சயம் ..!!




சிறு துளி கூட பெரு வெள்ளம் ஆகும் ..!!

சிறு முயற்சிகூட பெரும் வெற்றியாகும் ..!!

நம்பிக்கையோடு உழைத்திடு தோழா..!!

 நல்வாழ்வு  உனக்காக காத்திருக்கும் தோழா..!!


சோர்வின்றி உழைத்து சோம்பலை  விரட்டு..!!

வெற்றியின் கனியை  சுவைத்து மகிழ்ந்திடு..!!

உண்மை உழைப்பால் உயர்ந்து வளர்ந்திடு..!!

வாழ்வினில் நிம்மதி பெற்று  வாழ்ந்திடு..!! 


முயற்சி என்னும் மந்திரத்தால் ..!!

முடியாதது இவ்வுலகில் ஏதுமில்லை. .!!

ஒவ்வொரு தொழிலும்  உயர்ந்த தொழிலே.!!

உழைப்பின் உயர்வை என்றும் போற்றுவோம்..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்