- சி. குமரேஸ்வரி
இரவு
எதையும் கேட்கவில்லை,
அவளின் மௌனத்தை
சுமூகமாக ஏற்றுக்கொண்டது.
நாள் முழுதும் சேர்த்த
சொற்கள் சோர்ந்து,
மேசையின் ஓரத்தில்
அமைதியாக படுத்திருந்தன.
இன்று
கவிதை பிறக்கவில்லை,

ஆனால்
பிறக்க வேண்டிய உணர்வுகள்
உறங்காமல் இருந்தன.
ஜன்னல் வழியே வந்த காற்று
ஒரு வரி போல
சற்றுநேரம் நின்றது,
அதைப் பிடிக்க
அவளுக்கு விருப்பமில்லை.
நட்சத்திரங்கள்
அவளின் எண்ணங்களைப் போல,
சில அருகில்,
சில தூரத்தில்.
கடிகாரத்தின் முள்
அவளை விரட்டவில்லை,
இரவு
எழுதவில்லை
ஆனால்
அவளுக்குள்
ஒரு கவிதை
மௌனமாக விழித்திருந்தது.
(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)
சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
தற்காலிக ஓய்வு.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடிதத்தில் உள்ளது என்ன.. யாருக்கான மெசேஜ் இது?
மே 20ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பேரம் பேச வேண்டிய அவசியமில்லை – விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
இதுதான் உங்களது நாகரிக அரசியலா முதல்வர் விஜய் அவர்களே.. வானதி சீனிவாசன் கேள்வி
இளையராஜாவுக்கு 1540.. கார்த்திக் சுப்பராஜுக்கு 10.. ஒரு ஸ்வீட் செய்தி!
பொது வாழ்வில் இருந்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஓய்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் திமுகவினர்
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்...காரணம் இது தான்
உயிரை உலுக்கும் பனி.. 200 வகையான சாப்பாடு.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 7)
{{comments.comment}}