- சி. குமரேஸ்வரி
இரவு
எதையும் கேட்கவில்லை,
அவளின் மௌனத்தை
சுமூகமாக ஏற்றுக்கொண்டது.
நாள் முழுதும் சேர்த்த
சொற்கள் சோர்ந்து,
மேசையின் ஓரத்தில்
அமைதியாக படுத்திருந்தன.
இன்று
கவிதை பிறக்கவில்லை,

ஆனால்
பிறக்க வேண்டிய உணர்வுகள்
உறங்காமல் இருந்தன.
ஜன்னல் வழியே வந்த காற்று
ஒரு வரி போல
சற்றுநேரம் நின்றது,
அதைப் பிடிக்க
அவளுக்கு விருப்பமில்லை.
நட்சத்திரங்கள்
அவளின் எண்ணங்களைப் போல,
சில அருகில்,
சில தூரத்தில்.
கடிகாரத்தின் முள்
அவளை விரட்டவில்லை,
இரவு
எழுதவில்லை
ஆனால்
அவளுக்குள்
ஒரு கவிதை
மௌனமாக விழித்திருந்தது.
(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை சொர்க்கவாசல் திறப்பு!
கடந்து வந்த பாதை!
மார்கழி பனித்துளி!
வைரத்தின் கனவு விவசாயியின் கையில்!
சோம்பேறி
கவலையில் மூழ்கிய கிராமங்கள்.. சோகத்தில் மக்கள்.. விமான நிலைய விசனங்கள்!
நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
எங்கள் வீட்டில் எல்லா நாளும்.. The Importance of Joint Family
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
{{comments.comment}}