மௌனமாக விழித்திருந்தது.. ஒரு கவிதை!

Dec 29, 2025,02:51 PM IST

- சி. குமரேஸ்வரி


இரவு

எதையும் கேட்கவில்லை,

அவளின் மௌனத்தை

சுமூகமாக ஏற்றுக்கொண்டது.

நாள் முழுதும் சேர்த்த

சொற்கள் சோர்ந்து,

மேசையின் ஓரத்தில்

அமைதியாக படுத்திருந்தன.

இன்று

கவிதை பிறக்கவில்லை,




ஆனால்

பிறக்க வேண்டிய உணர்வுகள்

உறங்காமல் இருந்தன.

ஜன்னல் வழியே வந்த காற்று

ஒரு வரி போல

சற்றுநேரம் நின்றது,

அதைப் பிடிக்க

அவளுக்கு விருப்பமில்லை.

நட்சத்திரங்கள்

அவளின் எண்ணங்களைப் போல,

சில அருகில்,

சில தூரத்தில்.

கடிகாரத்தின் முள்

அவளை விரட்டவில்லை,

இரவு

நேரத்தையே மறக்க வைத்தது.

இந்த இரவில்  

எழுதவில்லை 

ஆனால்

அவளுக்குள்

ஒரு கவிதை

மௌனமாக விழித்திருந்தது.


(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்