- சி. குமரேஸ்வரி
இரவு
எதையும் கேட்கவில்லை,
அவளின் மௌனத்தை
சுமூகமாக ஏற்றுக்கொண்டது.
நாள் முழுதும் சேர்த்த
சொற்கள் சோர்ந்து,
மேசையின் ஓரத்தில்
அமைதியாக படுத்திருந்தன.
இன்று
கவிதை பிறக்கவில்லை,

ஆனால்
பிறக்க வேண்டிய உணர்வுகள்
உறங்காமல் இருந்தன.
ஜன்னல் வழியே வந்த காற்று
ஒரு வரி போல
சற்றுநேரம் நின்றது,
அதைப் பிடிக்க
அவளுக்கு விருப்பமில்லை.
நட்சத்திரங்கள்
அவளின் எண்ணங்களைப் போல,
சில அருகில்,
சில தூரத்தில்.
கடிகாரத்தின் முள்
அவளை விரட்டவில்லை,
இரவு
எழுதவில்லை
ஆனால்
அவளுக்குள்
ஒரு கவிதை
மௌனமாக விழித்திருந்தது.
(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
இவ்வளவு தான் உலகம்…!
மௌனத்தின் அந்தாக்ஷரி
காணாமல் போன கண்மணி.. விஷாலின் விளையாட்டுகள் 6
கல்லூரி!
{{comments.comment}}