மௌனமாக விழித்திருந்தது.. ஒரு கவிதை!

Dec 29, 2025,02:51 PM IST

- சி. குமரேஸ்வரி


இரவு

எதையும் கேட்கவில்லை,

அவளின் மௌனத்தை

சுமூகமாக ஏற்றுக்கொண்டது.

நாள் முழுதும் சேர்த்த

சொற்கள் சோர்ந்து,

மேசையின் ஓரத்தில்

அமைதியாக படுத்திருந்தன.

இன்று

கவிதை பிறக்கவில்லை,




ஆனால்

பிறக்க வேண்டிய உணர்வுகள்

உறங்காமல் இருந்தன.

ஜன்னல் வழியே வந்த காற்று

ஒரு வரி போல

சற்றுநேரம் நின்றது,

அதைப் பிடிக்க

அவளுக்கு விருப்பமில்லை.

நட்சத்திரங்கள்

அவளின் எண்ணங்களைப் போல,

சில அருகில்,

சில தூரத்தில்.

கடிகாரத்தின் முள்

அவளை விரட்டவில்லை,

இரவு

நேரத்தையே மறக்க வைத்தது.

இந்த இரவில்  

எழுதவில்லை 

ஆனால்

அவளுக்குள்

ஒரு கவிதை

மௌனமாக விழித்திருந்தது.


(கவிஞர் குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர், வி கே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்

news

அரவணைப்பு

news

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா

news

அம்மாவின் கோல நோட்டு (சிறுகதை)

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

news

திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி

news

மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?

news

சித்தத்தை சிவமயம் ஆக்கும்.. பித்தத்தை தெளிவாக சிவமாக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்