சென்னை: நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் நலப் பரிசோதனைக்காக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜீத்தின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த், ஷாலினி அஜீத்துக்கு போன் செய்து நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார். பைக் ரேஸ் மற்றும் பைக் ஸ்டன்ட்டின் போது ஏற்பட்ட விபத்தினால், அஜித் குமார் உடம்பில் ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.
தற்போது லைகா தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
பல மாதங்களாக அஜர்பைஜானில் தான் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்த படம் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஷூட்டிங் முடிந்து அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை வந்த அவர் மார்ச் 2ம் தேதி தனது மகனின் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்களை அஜித் மனைவி ஷாலினி இணையதள பக்கங்களில் ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்று நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்குமார் இன்றே வீடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனை சென்றுள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித்குமார் அஜர்பைஜான் செல்ல உள்ளார்.அஜர்பைஜானில் வரும் 15ம் தேதி நடைபெறும் படப்பபிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}