ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

Apr 28, 2025,10:14 AM IST

டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற தனது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் அஜித்குமார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அதாவது மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய  பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் குறித்த அறிவிப்புகளை கடந்த ஜனவரி 25ஆம் மத்திய அரசு தேதி அறிவித்திருந்தது. 




அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும், கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.


இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் மத்திய அரசின் உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் நடிகரும் ரேஸ்ருமான அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவ்விருதை வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடிகர் அஜித் இவ்விருதையை பெற இருப்பதால் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

அதே சமயம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக குழப்பத்தால்.. திமுக, அதிமுகவை வைத்து கொடி கட்டிப் பறக்கும் வதந்திகள்!

news

ஆட்சியமைக்க அழைக்கப்படாத விஜய்.. அடுத்து என்ன நடக்கும்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்

news

விஜய் ஆட்சி அமைக்க முடியாமல்.. மறு தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

news

தவெக ஆட்சியமைக்கட்டும்.. தொந்தரவு செய்ய மாட்டோம்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

news

பெரும்பான்மையை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் சொல்லிருக்கு.. கமல்ஹாசன்

news

விஜய் ஆட்சி அமைக்க பெருகும் ஆதரவு... இவங்களா இப்படி பேசுறாங்க? ஒரே வாரத்தில் மாறிய சூழல்!

news

விஜய்யை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. அபிஷேக் மனு சிங்வி

news

தவெகவை இந்தியா முழுவதும் அறிய வேண்டும் என்பதால் இந்தியில் பேசுகிறேன்.. கீர்த்தனா எம்எல்ஏ

news

ஜல்லிகட்டுப் போராட்டம் போல.. போராட தவெகவினர் திட்டமா?.. போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்