ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

Apr 28, 2025,10:14 AM IST

டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற தனது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் அஜித்குமார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.அதாவது மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய  பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் குறித்த அறிவிப்புகளை கடந்த ஜனவரி 25ஆம் மத்திய அரசு தேதி அறிவித்திருந்தது. 




அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும், கார் ரேஸருமான அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும், கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன.


இந்த நிலையில் இன்று மாலை டெல்லியில் மத்திய அரசின் உயரிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் நடிகரும் ரேஸ்ருமான அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இவ்விருதை வழங்கி கௌரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நடிகர் அஜித் இவ்விருதையை பெற இருப்பதால் தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

அதே சமயம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்று வரும் நிலையில், அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரிச் சட்டம், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!

news

சென்னை டூ பெங்களூரு, ஹைதராபாத் இடையே அதிக வேக ரயில் வழித் தடம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

news

பட்ஜெட் 20226-27ல் இடம் பெற்ற முக்கிய அறிவிப்புகள் - பழவேற்காட்டில் பறவைகள் சுற்றுலாத் திட்டம்

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்

news

மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?

news

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?

news

புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு

news

தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்.. இத்தனையும் ஒரே நாளில் நடந்தவையா?

news

சட்டசபை தேர்தலை குறிவைத்த மத்திய பட்ஜெட் 2026 : தமிழ்நாட்டுக்கு பல புதுத் திட்டங்கள் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்