சென்னை: நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தையாகவே இருந்திருக்கிறீர்கள். உங்களைப் பார்த்து நான் எப்போதுமே நெகிழ்ந்து இருக்கிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என நடிகை ஸ்ருதிஹாசன் தனது அப்பா கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன், கடந்த 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

நடிகர் கமலஹாசன் மற்றும் சரிகா தம்பதியின் மகள் ஆவார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பு, இயக்குனர் டான்சர் சண்டை பயிற்சியாளர் தயாரிப்பாளர் பாடகர் என பன்முக கொண்ட கலைஞர். இப்படி பல்வேறு திறமைகள் கொண்ட கமலஹாசனின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார் மகள் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் வாரிசு என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஸ்ருதிஹாசன் நடிகையாக பாடகராக, தந்தை நடித்த உன்னை போல் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளராக பன்முக திறமைகளை கொண்டவராக திகழ்கிறார்.
இது மட்டுமல்லாமல் இவர் நல்ல பேச்சுத் திறமை மற்றும் அமைப்பாளராகவும் செயல்படுகிறார். சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமலஹாசனின் வரிகளில் ஸ்ருதிஹாசனின் இசையமைப்பில் இனிமேல் ஆல்பம் ரிலீஸ் ஆனது. இதில் ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தனர். காதல் முதல் திருமணம் வரையிலான பந்தத்தை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் படு ரொமான்ஸ் மூடில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் தனது தந்தையின் 70 வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அந்த வாழ்த்துக் குறிப்பில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் மிகவும் அரிய மனிதர். உங்களுடன் இணைந்து நடப்பது எனக்கு எப்போதுமே பிடித்தமானது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எப்போதும் நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாகவே இருந்திருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அத்தனை மாயாஜாலங்களையும் கண்டு நான் எப்போதும் நெகழ்ந்திருக்கிறேன் உங்களுக்கு இன்னும் பல பிறந்தநாள் வரவேண்டும். உங்களுடைய கனவுகள் அனைத்தும் பலிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}