திருவனந்தபுரம்: எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சிகள் இடம் பெற்றது குறித்து நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிருத்வி ராஜ் இயக்கத்தில், உருவான படம் லூசிபர். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் இப்படம் பெற்றது. இதையடுத்து தற்போது லூசிபர் படத்தின் 2ம் பாகத்தை, எம்புரான் என்ற பெயரில் எடுத்துள்ளார். இதில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் மிகப் பெரிய ஹிட்டாகியுள்ளது. 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இப்படத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறித்த காட்சி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்கை: லூசிபர் படத்தின் 2ம் பாகமான எம்புரான் படத்தில் இடம்பெற்ற அரசியல், சமூக நோக்கிலான சில கருத்துக்கள் என்னுடைய ரசிகர்கள் பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறேன். ஒரு கலைஞராக, எனது எந்தப் படமும், எந்த ஒரு அரசியல் அமைப்பு, மதம், கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக துவேஷம் பரப்புவதாக அமைக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதை உறுதிப்படுத்த வேண்டியது எனது கடமையாகும்.
எனவே எனது பிரியப்பட்ட ரசிகர்களுக்கு மன உளைச்சலோ, மன வருத்தமோ ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், எனது படக் குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து எடுக்கவும் தீர்மானித்துள்ளோம்.
உங்களில் ஒருவனாக கடந்த 40 வருட கால சினிமா வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன். உங்களது அன்பும், நம்பிக்கையும்தான் எனது பலம். அதை விட மோகன்லால் பெரியவன் அல்ல என்று கூறியுள்ளார் மோகன்லால்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}