முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர்.. சிறந்த பொருளாதார மேதை.. நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

Dec 27, 2024,06:22 PM IST

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவெடுக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர். அதற்காக பாடும்பட்டவர். அதேபோல் ஏழை எளிய மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தவர் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.




இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் உடலுக்கு இறுதி சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

news

பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்

news

என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்

news

மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??

news

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

news

ஓம் சாமியே சரணம் ஐயப்பா

news

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது!

news

மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!

அதிகம் பார்க்கும் செய்திகள்