சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவெடுக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர். அதற்காக பாடும்பட்டவர். அதேபோல் ஏழை எளிய மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தவர் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் உடலுக்கு இறுதி சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!
சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?
மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகளுக்கான ₹309 கோடி எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? : அண்ணாமலை கேள்வி!
கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்
துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!
{{comments.comment}}