சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவெடுக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர். அதற்காக பாடும்பட்டவர். அதேபோல் ஏழை எளிய மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தவர் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் உடலுக்கு இறுதி சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்
தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்
தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கல் நாடாளுமன்றத்தில் தாக்கல்
"ஹலோ.. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா".. From Shared Telephones to Endless Updates!
பரமபதம் விளையாட்டு.. முன்னோர்கள் வகுத்து வந்த அபாரமான விளையாட்டு!
Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!
கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்ப நாயனார்.. 63 நாயன்மார்கள் வரலாறு!
சின்ன பொண்ணு வேணுமா பெரிய பொண்ணு வேணுமா... விஷாலின் விளையாட்டுக்கள் 11
நான் வெறும் உடன்பிறப்பு மட்டுமல்ல—.. If I stand strong today!
{{comments.comment}}