சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவை பொருளாதாரத்தில் சிறந்த நாடாக உருவெடுக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர். அதற்காக பாடும்பட்டவர். அதேபோல் ஏழை எளிய மக்களுக்காகவும் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தவர் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பி பிரியங்கா காந்தி, காந்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு க ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் உடலுக்கு இறுதி சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவிற்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல மனிதர். சிறந்த பொருளாதார நிபுணர். அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
{{comments.comment}}