சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரெக்கை கட்டி பறந்த ஜெயலலிதா தமிழக அரசியலிலும் வரலாற்று சாதனை படைத்த ஒப்பற்ற தலைவியாக வீறு நடை போட்டவர். இவர் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், 6 முறை முதலமைச்சராகவும் இருந்தவர். தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், தொட்டில் குழந்தை திட்டம், பெண் சிசுக்கொலை, 69 சதவிகித இட ஒதுக்கீடு, அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற சிறப்பான பல திட்டங்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். யாருக்கும் பயப்படாமல் தவறு என்றால் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற கர்ஜனையான பேச்சால் இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சிறந்த பெண்மணி. இதனால் இவரை இரும்புப் பெண்மணி எனவும் மக்கள் அழைத்தனர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற சூளுரையால் தமிழக மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் வகையில் அசைக்க முடியாத சாம்ராஜியத்தை கட்டி காத்தவர். இதனால் மக்கள் அம்மா என்று அன்புடன் அழைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் இன்று.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காமராசர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
அதே சமயத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார். அதன்பின்னர், 77 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அக்காட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், மறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார்.
பல வருடங்களுக்குப் பிறகு போயஸ் கார்டனில் உள்ள மறைந்த ஜெயலலிதாவின் இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை காலமாக ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தாத நடிகர் ரஜினிகாந்த் இந்த முறை சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}