ஈஷா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.. தியானத்தில் தமன்னா.. கலங்கிப் போன சந்தானம்!

Mar 09, 2024,12:23 PM IST

கோவை: கோவை உள்ள ஈஷா யோகா மையத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட தமன்னா மற்றும் சந்தானம் ஆகியோர் அழுத கண்களுடன் உருக்கமாக பங்கேற்றனர்.


மகா சிவராத்திரி என்றாலே சிவ பெருமானை நினைத்து விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவன் கோவில்களில் இரவு முழுவதும் நடக்கும் சிவ பூஜையில் பங்கேற்க வேண்டும். அன்று நாள் முழுவதும் உணவு உண்ணாமலும், உறங்காமலும் இருக்க வேண்டும். இடைவிடாது சிவ மந்திரங்களை உச்சரித்தபடி சிவ சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். மாலையில் சிவன் கோவில்களில் நடக்கும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.




மொத்தம் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், 2ம் காலத்தில் விஷ்ணுவும், 3ம் காலத்தில் அம்பிகையும், 4ம் காலத்தில் தேவர்களும் ரிஷிகளும் சிவபெருமானை வழிபட்ட காலமாகும். இந்த நான்கு கால பூஜை முடிந்த பிறகு கோவில்களில் தரப்படும் பிரசாதத்தை சாப்பிட்டு, பட்டினி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு மார்ச் 09ம் தேதி பகல் முழுவதும் தூங்காமல், மாலை வீட்டில் விளக்கேற்றி சிவனை வழிபட்ட பிறகு, இரவு 7 மணிக்கு பிறகே தூங்க செல்ல வேண்டும்.


மூன்றாம் கால பூஜையான இரவு 11.45 முதல் 12.15 வரை நடைபெறும் பூஜையின் போது கண்டிப்பாக கண் விழித்து சிவ வழிபாடு செய்ய வேண்டும். அடி முடி காண முடியாத லிங்கோத்பவராக சிவபெருமான் காட்சி தந்த காலமாகும். இந்த நேரத்தில் கண்டிப்பாக கண்விழித்து பூஜை செய்தால், மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபட்ட பலனை பெற்று விடலாம்.


ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில், சற்குரு தலைமையில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஷங்கர் மஹாதேவன் இசை நிகழ்ச்சி நடத்தினார். 


நடிகை தமன்னா மனம் உருகி சிவனை வழிப்பட்டார். நடிகர் சந்தானம் மனம் உருகி கண்ணீர் விட்டு வேண்டிகொண்டார். தமன்னா மற்றும் சந்தானம் கலந்து கொண்டு சிவபெருமானை உருகி வேண்டிய வீடியோக்கள் தற்பொழுது இணைய பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

Exit Poll: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்.. தவெகவுக்கு 3வது இடம்.. எக்ஸிட் போல்

news

அதிமுகவுக்கு அதிக சீட் கிடைக்கும்.. 2 எக்ஸிட் போல்களின் முடிவுகள் கூறுவது என்ன?

news

Exit Poll: தவெகவுக்கு 98 முதல் 120 இடங்கள் வரை கிடைக்கும் - ஆக்ஸிஸ் மை இந்தியா (இந்தியா டுடே)

news

Exit Poll சொல்வது என்ன.. புதிய சக்தியாக உருவெடுக்குமா தவெக.. விஜயகாந்த்தை மிஞ்சுவாரா விஜய்?

news

Exit Poll கலாட்டாக்கள்: "நாலு மே வரட்டும்".. முடியலையே.. முடியலையேடா!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

news

செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவு

news

Tamil Nadu: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்.. மாணவர் சேர்க்கை 1 லட்சத்தைத் தாண்டி அசத்தல்!

news

5 மாநில சட்டசபை தேர்தல் 2026: இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்