சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது 15 வயது வருட நண்பரை, அதாவது காதலரை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளரும் நடிகருமான சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் இளைய மகள். இவர் தமிழில் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பைரவா, ரஜினிமுருகன், ரெமோ, சர்க்கார், மாமன்னன், சண்டைக்கோழி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் அவ்வப்போது நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான ரகு தாத்தா திரைப்படம் பல்வேறு தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் நடிகை சாவித்திரி கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள நடிகையர் திலகம் படத்தில் நடித்து பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றவர். இப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி காலத்திலிருந்து நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக காதலித்து வந்த ஆண்டனியை அறிமுகப்படுத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகைகள் திரிஷா, ஹன்சிகா மோத்வானி, ராசி கண்ணா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளும் ஹார்ட்டின் விட்டு வாழ்த்தியுள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் 15 வருடமாக காதலித்து வரும் ஆண்டனி தட்டில், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர். அங்கும், துபாயிலுமாக அவர் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Monday Motivation: ஆழ்கடலின் மோனத்தால் அறிவுநிலை கடந்த ஞானி.. கடல்!
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்
சென்னை மாணவர்களுக்கு குட் நியூஸ்: இன்று முதல் 42 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஐவகை நிலங்களின் பெயரில்.. மாணவர் தலைவர், அமைச்சரைத் தேர்வு செய்யும்.. மகிழ் முற்றம்
எழுத்து சொற்களின் தொகுப்பல்ல.. மனித வாழ்வை மாற்றும் சக்தி.. எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!
இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
சிந்தனைச் சிதறல்.. தவறு என்றே தெரியாத ஒன்றை.. தவறானாலும் அது நமது தவறாகாது!
நீலத்திரைக்கடலோரம்!
{{comments.comment}}