R K Selvamani birthday: குடும்பத்தினர் நண்பர்களுடன் கேக் வெட்டி ரோஜா கொண்டாட்டம்!

Oct 22, 2023,10:25 AM IST

சென்னை: இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் ஆந்திர மாநில அமைச்சரும், ஆர். கே. செல்வமணியின் மனைவியுமான நடிகை ரோஜா.


இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநரானவர். இவர் இயக்கிய முதல் படமான புலன் விசாரணை மிகப் பெரிய ஹிட்டடித்தது. இது ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையாகும்.  முதல் படமே ஹிட்டானதால் அனைவராலும் பார்க்கப்படும் இயக்குநராக மாறினார் ஆர்.கே. செல்வமணி. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதன் பிறகு செம்பருத்தி என்ற வித்தியாசமான காதல் கதையைப் படமாக்கினார் ஆர்.கே.செல்வமணி. இதில்தான் தனது காதல் மனைவி ரோஜாவை நடிகையாக அறிமுகம் செய்தார். 




தொடர்ந்து அரசியல், காதல் என்று மாறி மாறி டிராவல் செய்து வந்த அவர் கடைசியாக 2015ம் ஆண்டு புலன் விசாரணை 2 படத்தை இயக்கினார். இடையில் ஒரு படத்தில் நடிக்கவும் செய்தார். இன்று ஆர்.கே. செல்வமணிக்கு 57வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவரது மனைவி ரோஜா தடபுடலான பிறந்த நாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரமாண்ட கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.


ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரோஜா, ஆந்திர மாநில அரசியலில் முக்கியமான ஒரு பிரமுகராக வலம் வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான அவர் அமை்சசராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

news

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

news

பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!

news

ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?

news

நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)

news

மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

news

மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!

news

எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)

news

சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்