சென்னை: இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் பிறந்தநாளை கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் ஆந்திர மாநில அமைச்சரும், ஆர். கே. செல்வமணியின் மனைவியுமான நடிகை ரோஜா.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநரானவர். இவர் இயக்கிய முதல் படமான புலன் விசாரணை மிகப் பெரிய ஹிட்டடித்தது. இது ஆட்டோ சங்கர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையாகும். முதல் படமே ஹிட்டானதால் அனைவராலும் பார்க்கப்படும் இயக்குநராக மாறினார் ஆர்.கே. செல்வமணி. தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதன் பிறகு செம்பருத்தி என்ற வித்தியாசமான காதல் கதையைப் படமாக்கினார் ஆர்.கே.செல்வமணி. இதில்தான் தனது காதல் மனைவி ரோஜாவை நடிகையாக அறிமுகம் செய்தார்.

தொடர்ந்து அரசியல், காதல் என்று மாறி மாறி டிராவல் செய்து வந்த அவர் கடைசியாக 2015ம் ஆண்டு புலன் விசாரணை 2 படத்தை இயக்கினார். இடையில் ஒரு படத்தில் நடிக்கவும் செய்தார். இன்று ஆர்.கே. செல்வமணிக்கு 57வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவரது மனைவி ரோஜா தடபுடலான பிறந்த நாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரமாண்ட கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார்.
ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ரோஜா, ஆந்திர மாநில அரசியலில் முக்கியமான ஒரு பிரமுகராக வலம் வருகிறார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவான அவர் அமை்சசராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ம.நீ.ம சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் அறிவிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
இலவச ஃபிரிட்ஜ், தீபாவளிக்கு வேட்டி சேலை... அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தீவிரம் - இதுவரை 56 இடங்கள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் தேமுதிக.,வுக்கு எத்தனை தொகுதிகள்? இன்று இரவு முடிவாகிறது
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி எது? பியூஷ் கோயலுடன் முக்கிய சந்திப்பு
திமுக கூட்டணியில் விசிக.,விற்கு 8 இடங்கள் ஒதுக்கீடு
எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்...பயண விபரம் வெளியீடு
தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் உத்தரவு
தவிர்க்க முடியாத சிறுத்தைகள்.. தடதடக்கும் அரசியல் பாதை.. திரும்பிப் பார்க்க வைக்கும் திருமா
{{comments.comment}}