திருவண்ணாமலை: 3வது முறையாக எம்எல்ஏ வாக வெற்றி பெற வேண்டும் என்று நான் ஐய்யாவையும் அம்மாவையும் வேண்டிக்கிறேன் என்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் தெரிவித்தார் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபைத் தொகுதியில் நடிகையும், அமைச்சருமான ரோஜா 3 வது முறையாக போட்டியிடுகிறார். இங்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் ரோஜா இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரோஜா. அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை ஈஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, அம்மா தரிசனம் செய்துவிட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தோட ஜனங்களுக்கு சேவை செய்வதற்கு நான் முன்னுக்கு போயிட்டே இருக்கேன். மறுபடியும் இந்த வருஷம் நேற்று கிரிவலம் சுத்திட்டு வந்தோம். இன்று அண்ணாமலையார், அம்மாவின் அபிஷேகம் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
அவங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் இருக்கனும். என் மூலம் ஜனங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறேன். எங்களுடைய லீடர் ஜெகன்மோகன் ரெட்டி. ஜனங்களை நேசிக்கும் லீடர். சோ அவர் 2வது முறை சிஎம் ஆகனும்னு மனப்பூர்வமா வேண்டிக்கிறேன். நான் 3வது வாட்டி எம்எல்ஏவா வெற்றி பெறனும்னு ஐய்யாவையும் அம்மாவையும் வேண்டிக்கிறேன் என்றார் ரோஜா.
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
{{comments.comment}}