திருவண்ணாமலை: 3வது முறையாக எம்எல்ஏ வாக வெற்றி பெற வேண்டும் என்று நான் ஐய்யாவையும் அம்மாவையும் வேண்டிக்கிறேன் என்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் தெரிவித்தார் நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபைத் தொகுதியில் நடிகையும், அமைச்சருமான ரோஜா 3 வது முறையாக போட்டியிடுகிறார். இங்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரும் ரோஜா இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. சாமி தரிசனத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ரோஜா. அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை ஈஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, அம்மா தரிசனம் செய்துவிட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தோட ஜனங்களுக்கு சேவை செய்வதற்கு நான் முன்னுக்கு போயிட்டே இருக்கேன். மறுபடியும் இந்த வருஷம் நேற்று கிரிவலம் சுத்திட்டு வந்தோம். இன்று அண்ணாமலையார், அம்மாவின் அபிஷேகம் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
அவங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் இருக்கனும். என் மூலம் ஜனங்களுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறேன். எங்களுடைய லீடர் ஜெகன்மோகன் ரெட்டி. ஜனங்களை நேசிக்கும் லீடர். சோ அவர் 2வது முறை சிஎம் ஆகனும்னு மனப்பூர்வமா வேண்டிக்கிறேன். நான் 3வது வாட்டி எம்எல்ஏவா வெற்றி பெறனும்னு ஐய்யாவையும் அம்மாவையும் வேண்டிக்கிறேன் என்றார் ரோஜா.
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!
இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி
{{comments.comment}}