சென்னை: நடிகர் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
லியோ படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளிக்கப் போக அவர் கூறிய வார்த்தைகள் சலசலப்பைக் கிளப்பி விட்டன. இதுகுறித்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்து டிவீட் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து விட்டன. கூடவே வழக்கும் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திரிஷாவே என்னை மன்னித்து விடு.. உன் திருமணத்தின்போது மாங்கல்யம் வைத்த தேங்காய்த் தட்டு வலம் வரும்போது அதைத் தொட்டு உன்னை ஆசிர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும் என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக டிவீட் போட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது தெய்வ குணம் என்று கூறியுள்ளார் திரிஷா.
இனியாவது மன்சூர் அலிகான் பொது வெளியில் பேசும்போது தனது வார்த்தைகளில் கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.. அவர் மட்டுமல்ல.. எல்லோருமே கவனமாக பேசுவது நல்லது!
இத்தோடு எல்லாம் முடிந்தது.. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}