சென்னை: நடிகர் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
லியோ படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளிக்கப் போக அவர் கூறிய வார்த்தைகள் சலசலப்பைக் கிளப்பி விட்டன. இதுகுறித்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்து டிவீட் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து விட்டன. கூடவே வழக்கும் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திரிஷாவே என்னை மன்னித்து விடு.. உன் திருமணத்தின்போது மாங்கல்யம் வைத்த தேங்காய்த் தட்டு வலம் வரும்போது அதைத் தொட்டு உன்னை ஆசிர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும் என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக டிவீட் போட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது தெய்வ குணம் என்று கூறியுள்ளார் திரிஷா.
இனியாவது மன்சூர் அலிகான் பொது வெளியில் பேசும்போது தனது வார்த்தைகளில் கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.. அவர் மட்டுமல்ல.. எல்லோருமே கவனமாக பேசுவது நல்லது!
இத்தோடு எல்லாம் முடிந்தது.. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}