சென்னை: நடிகர் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
லியோ படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளிக்கப் போக அவர் கூறிய வார்த்தைகள் சலசலப்பைக் கிளப்பி விட்டன. இதுகுறித்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்து டிவீட் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து விட்டன. கூடவே வழக்கும் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திரிஷாவே என்னை மன்னித்து விடு.. உன் திருமணத்தின்போது மாங்கல்யம் வைத்த தேங்காய்த் தட்டு வலம் வரும்போது அதைத் தொட்டு உன்னை ஆசிர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும் என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக டிவீட் போட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது தெய்வ குணம் என்று கூறியுள்ளார் திரிஷா.
இனியாவது மன்சூர் அலிகான் பொது வெளியில் பேசும்போது தனது வார்த்தைகளில் கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.. அவர் மட்டுமல்ல.. எல்லோருமே கவனமாக பேசுவது நல்லது!
இத்தோடு எல்லாம் முடிந்தது.. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.!
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}