சென்னை: நடிகர் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக நடிகை திரிஷா கூறியுள்ளார்.
லியோ படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளிக்கப் போக அவர் கூறிய வார்த்தைகள் சலசலப்பைக் கிளப்பி விட்டன. இதுகுறித்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்து டிவீட் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து விட்டன. கூடவே வழக்கும் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில் நேற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்குச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திரிஷாவே என்னை மன்னித்து விடு.. உன் திருமணத்தின்போது மாங்கல்யம் வைத்த தேங்காய்த் தட்டு வலம் வரும்போது அதைத் தொட்டு உன்னை ஆசிர்வதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கட்டும் என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னித்து விட்டதாக டிவீட் போட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனித இயல்பு.. மன்னிப்பது தெய்வ குணம் என்று கூறியுள்ளார் திரிஷா.
இனியாவது மன்சூர் அலிகான் பொது வெளியில் பேசும்போது தனது வார்த்தைகளில் கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.. அவர் மட்டுமல்ல.. எல்லோருமே கவனமாக பேசுவது நல்லது!
இத்தோடு எல்லாம் முடிந்தது.. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.!
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}