வெற்று அறிவிப்பு... விளம்பரத்திற்காக மட்டுமே போடப்பட்ட பட்ஜெட்: எடப்பாடி பழனிச்சாமி

Mar 14, 2025,05:26 PM IST

சென்னை: திமுக வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.


இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கடன் எவ்வளவு இருக்கு தெரியுமா?. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடன் வாங்கிதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூடிய நிலை இன்று உள்ளது. கடன் வாங்காமல் வருவாயை பெருக்கி அதன் மூலம் வளர்ச்சி இருந்தால் சரி. அதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த கடனை யார் கட்டுவது.


திமுகவின் பல்வேறு வாக்குறுதிகள் எதவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது?. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படுவது சாத்தியமா? கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்