சென்னை: திமுக வின் பல்வேறு வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், கடன் எவ்வளவு இருக்கு தெரியுமா?. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் கடன் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கடன் வாங்கிதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் கூடிய நிலை இன்று உள்ளது. கடன் வாங்காமல் வருவாயை பெருக்கி அதன் மூலம் வளர்ச்சி இருந்தால் சரி. அதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த கடனை யார் கட்டுவது.
திமுகவின் பல்வேறு வாக்குறுதிகள் எதவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ரேஷனில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக வழங்கப்படும் என்ற திமுக வாக்குறுதி என்ன ஆனது?. நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களே தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்தே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளை நிரப்பவே முடியாது. ஒரு ஆண்டில் எப்படி 40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது சாத்தியமா? கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதிய உயர்வு எங்கே? இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பது வெற்று அறிவிப்பு, விளம்பரத்திற்காக போடப்பட்ட பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார்.
விடியா ஆட்சியில் விலகாத இருள்: பச்சிளம் குழந்தை முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற சூழல்: தவெக
அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
National Vaccination Day.. குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது!
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
பட்டு பட்டு... பட்டாம்பூச்சி.. பார்த்துப் பார்த்து ரசிச்சாலே.. மனதுக்கு மகிழ்ச்சி!
தேர்தல் 2026 ஓட்டு போட சொந்த ஊருக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
அன்பு உயர்த்தும் மொழி .. ஆணவே அழிக்கும் மொழி!
நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை..தவெக திட்டவட்டம்
முதல் நாளிலேயே ரூ.1.26 கோடி பறிமுதல்...தலைமைத் தேர்தல் அதிகாரி சொன்ன பகீர் தகவல்
{{comments.comment}}