சென்னை: தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியது அஇஅதிமுக.
அதனை விட்டுக்கொடுக்கத் துணிவது திமுக. காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இருமாநில உறவுகளை மேம்படுத்தியும், சட்டப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசை இணைத்தும், காவிரி நீர் முறையாகக் கிடைக்கச் செய்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
புரட்சித் தலைவரின் சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, அதில் வெற்றிகண்டு, அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, கழக எம்.பி.க்கள் மூலம் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, ஆணையம் அமைய வழிவகுத்ததோடு, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் கனவுத் திட்டமான "நடந்தாய் வாழி காவிரி" திட்டத்தினை துவக்கி, அதற்கு மத்திய அரசிடம் பேசி நிதியைப் பெற்றவர் இபிஎஸ் அவர்கள்.
நீங்களும் உங்கள் தந்தையும் காவிரி விவகாரத்தில் செய்தது என்ன?
காவிரி ஒப்பந்தத்தை Renewal செய்யாமல் ஒட்டுமொத்த காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் மூலக்காரணமாக இருந்தவர் கருணாநிதி.
காவிரி நீரைத் தர மாட்டோம், மேகதாதில் அணை கட்டுவோம் என்று இன்றுவரை பேசிக் கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவர் நீங்கள்.
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியது அஇஅதிமுக.
அதனை விட்டுக்கொடுக்கத் துணிவது திமுக. எனவே, காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை! என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}