சென்னை: தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியது அஇஅதிமுக.
அதனை விட்டுக்கொடுக்கத் துணிவது திமுக. காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இருமாநில உறவுகளை மேம்படுத்தியும், சட்டப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசை இணைத்தும், காவிரி நீர் முறையாகக் கிடைக்கச் செய்தவர் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
புரட்சித் தலைவரின் சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, அதில் வெற்றிகண்டு, அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க, கழக எம்.பி.க்கள் மூலம் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, ஆணையம் அமைய வழிவகுத்ததோடு, காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் கனவுத் திட்டமான "நடந்தாய் வாழி காவிரி" திட்டத்தினை துவக்கி, அதற்கு மத்திய அரசிடம் பேசி நிதியைப் பெற்றவர் இபிஎஸ் அவர்கள்.
நீங்களும் உங்கள் தந்தையும் காவிரி விவகாரத்தில் செய்தது என்ன?
காவிரி ஒப்பந்தத்தை Renewal செய்யாமல் ஒட்டுமொத்த காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் மூலக்காரணமாக இருந்தவர் கருணாநிதி.
காவிரி நீரைத் தர மாட்டோம், மேகதாதில் அணை கட்டுவோம் என்று இன்றுவரை பேசிக் கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவர் நீங்கள்.
தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டியது அஇஅதிமுக.
அதனை விட்டுக்கொடுக்கத் துணிவது திமுக. எனவே, காவிரி நதிநீர் பற்றி பேச பொம்மை முதல்வருக்கு துளியும் அருகதை இல்லை! என்று தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை
தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?
கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!
குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!
வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!
தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!
இதற்கு மேல்....!
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
{{comments.comment}}