ரம்ஜானை முன்னிட்டு.. அதிகரிக்கும் ஆடு விற்பனை.. நெல்லையில் 3 கோடிக்கு விற்பனை.. வியாபாரிகள் ஹேப்பி

Apr 09, 2024,05:12 PM IST

திருநெல்வேலி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் 3 கோடிக்கு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


ரம்ஜான் பண்டிகை என்றாலே பாய் வீட்டு பிரியாணி தான். அதுவும் கறி இல்லாத பிரியாணி இருக்குமா. இதனால் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதும். இப்போதும் ரம்ஜான் நெருங்கி விட்டதால், ஆட்டு விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.


நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாயன்று  நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம். இங்கு நாட்டு ஆடுகள், வெள்ளாடு, கிடாய் போன்ற பலரக ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.




இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூபாய் பத்தாயிரம் முதல் விற்பனையானது. இதையடுத்து கொங்கு ரக கிடாக்களும் சுமார் 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இந்த சந்தையில் மூன்று கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், ரம்ஜான் பண்டிகையும் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

news

மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

அதிகம் பார்க்கும் செய்திகள்