திருநெல்வேலி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் 3 கோடிக்கு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகை என்றாலே பாய் வீட்டு பிரியாணி தான். அதுவும் கறி இல்லாத பிரியாணி இருக்குமா. இதனால் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதும். இப்போதும் ரம்ஜான் நெருங்கி விட்டதால், ஆட்டு விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாயன்று நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம். இங்கு நாட்டு ஆடுகள், வெள்ளாடு, கிடாய் போன்ற பலரக ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூபாய் பத்தாயிரம் முதல் விற்பனையானது. இதையடுத்து கொங்கு ரக கிடாக்களும் சுமார் 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இந்த சந்தையில் மூன்று கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், ரம்ஜான் பண்டிகையும் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}