ரம்ஜானை முன்னிட்டு.. அதிகரிக்கும் ஆடு விற்பனை.. நெல்லையில் 3 கோடிக்கு விற்பனை.. வியாபாரிகள் ஹேப்பி

Apr 09, 2024,05:12 PM IST

திருநெல்வேலி : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி அருகே உள்ள மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் 3 கோடிக்கு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


ரம்ஜான் பண்டிகை என்றாலே பாய் வீட்டு பிரியாணி தான். அதுவும் கறி இல்லாத பிரியாணி இருக்குமா. இதனால் ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தைகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதும். இப்போதும் ரம்ஜான் நெருங்கி விட்டதால், ஆட்டு விற்பனையும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆட்டு சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.


நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான மேலப்பாளையம் ஆட்டுச் சந்தை உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாயன்று  நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம். இங்கு நாட்டு ஆடுகள், வெள்ளாடு, கிடாய் போன்ற பலரக ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.




இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனை செய்துள்ளனர். ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சம் ரூபாய் பத்தாயிரம் முதல் விற்பனையானது. இதையடுத்து கொங்கு ரக கிடாக்களும் சுமார் 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இந்த சந்தையில் மூன்று கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் நிறைய ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், ரம்ஜான் பண்டிகையும் களைகட்ட ஆரம்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்