இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்.. ஏர் இந்தியா விமான சேவை ரத்து.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

May 07, 2025,10:59 AM IST

டெல்லி: பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  ஏர்  விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.



காஷ்மீரில் உள்ள பைசரன்  பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த 22 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது . அதன்படி இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டு, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது.அதேபோல் எல்லை தாண்டி தாக்குதல்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து வரும் இறக்குமதி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு  மோசமடைந்தது. 


இதற்கிடையே பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை குறித்த பயிற்சி அளிக்க இன்று 244 இடங்களில் போர்க்கால ஒத்தி நடத்தப்படும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.




இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலைக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1:44 மணி அளவில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.  இதனையடுத்து இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டது. ஜெய்ஹிந்த் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. 


இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற சூழல் காரணமாக, இன்று ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட், உள்ளிட்ட இடங்களில் ஏர் இந்திய விமான சேவைகள் இன்று பிற்பகல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. 


மேலும், ஜம்மு, சம்பா, கத்வா, ரஜோரி பூஜ்ச் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

news

திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

news

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!

news

Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!

news

வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?

news

மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!

news

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!

news

சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!

news

போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்