டெல்லி: கனடா குடியுரிமையுடன் இந்தியாவில் வசித்து வந்த நடிகர் அக்ஷய்குமார் மீண்டும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
"இதயத்திலும், குடியுரிமையிலும் நான் இந்தியன்" என்று டிவீட் போட்டுள்ளார் அக்ஷய்குமார்.
இந்தியாவில் பிறந்தவராக இருந்தாலும் கூட கனடா நாட்டுக் குடியுரிமையுடன் இருந்து வந்தார் அக்ஷய் குமார். ஆனால் இதை வெளிப்படையாக அவர் சொல்லாமல் வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இது சர்ச்சையானது. தேசபக்தி குறித்து வாய் வலிக்கப் பேசும் அக்ஷய்குமார் முதலில் தான் இந்தியக் குடியுரிமை உள்ளவரா என்பதை விளக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்தன.
அவர் முதலில் இந்தியரே கிடையாது. கனடா குடியுரிமையுடன் இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியக் குடியுரிமை இல்லாமல் அவர் படங்களில் தேச பக்தி குறித்து வகுப்பெடுக்கக் கூடாது என்று பலரும் கிண்டலடித்தனர்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில், எனக்கு எல்லாமே இந்தியாதான். இந்தியாதான் எனக்குப் பெயரையும், புகழையும், பணத்தையும் கொடுத்தது. ஆனால் எனது கனடா குடியுரிமையைக் குத்திக் காட்டி பலர் பேசுவது வருத்தம் அளிக்கிறது. அது உண்மயைில் கெளரவக் குடியுரிமைதான் என்று கூறியிருந்தார் அக்ஷய்குமார்.
தான் இந்தியக் குடியுரிமை பெற முடிவு செய்திருப்பதாகவும் பின்னர் அக்ஷய்குமார் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவீட் போட்டுள்ளார். அதில் இந்தியக் குடியுரிமை கிடைத்ததற்கான ஆவணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}