டெல்லி: கனடா குடியுரிமையுடன் இந்தியாவில் வசித்து வந்த நடிகர் அக்ஷய்குமார் மீண்டும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
"இதயத்திலும், குடியுரிமையிலும் நான் இந்தியன்" என்று டிவீட் போட்டுள்ளார் அக்ஷய்குமார்.
இந்தியாவில் பிறந்தவராக இருந்தாலும் கூட கனடா நாட்டுக் குடியுரிமையுடன் இருந்து வந்தார் அக்ஷய் குமார். ஆனால் இதை வெளிப்படையாக அவர் சொல்லாமல் வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இது சர்ச்சையானது. தேசபக்தி குறித்து வாய் வலிக்கப் பேசும் அக்ஷய்குமார் முதலில் தான் இந்தியக் குடியுரிமை உள்ளவரா என்பதை விளக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்தன.
அவர் முதலில் இந்தியரே கிடையாது. கனடா குடியுரிமையுடன் இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியக் குடியுரிமை இல்லாமல் அவர் படங்களில் தேச பக்தி குறித்து வகுப்பெடுக்கக் கூடாது என்று பலரும் கிண்டலடித்தனர்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில், எனக்கு எல்லாமே இந்தியாதான். இந்தியாதான் எனக்குப் பெயரையும், புகழையும், பணத்தையும் கொடுத்தது. ஆனால் எனது கனடா குடியுரிமையைக் குத்திக் காட்டி பலர் பேசுவது வருத்தம் அளிக்கிறது. அது உண்மயைில் கெளரவக் குடியுரிமைதான் என்று கூறியிருந்தார் அக்ஷய்குமார்.
தான் இந்தியக் குடியுரிமை பெற முடிவு செய்திருப்பதாகவும் பின்னர் அக்ஷய்குமார் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவீட் போட்டுள்ளார். அதில் இந்தியக் குடியுரிமை கிடைத்ததற்கான ஆவணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
{{comments.comment}}