- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
நீலவண்ண
மேகமென
கடல் மீது
மோகம் கொண்டு
காதலோடு
கால் பதிக்க
வந்தவளே
கடல் அலையை
ரசிக்க வந்தேன்
கன்னி உன்
அழகில்
மயங்கிப் போனேன்

கடல் அலையா
இல்லை உன்
கூந்தல்
அலைபாயும்
காட்சியா
மனதில் பதிய மறுக்கிறது
கற்பனையை
தூண்டும்
காரிகையே
உன் பாத கொலுசின்
ஓசையா
இல்லை
அலை கடலின்
ஆர்ப்பரிக்கும்
ஓசையா
இயற்கையின்
படைப்பில்
வியந்துதான்
போகிறேன்
என்னை
கவிஞனாக்கிய
அழகு
தேவதையே
கடலோரம்
கால் பதித்திடவே
உனை தழுவிச்
செல்ல அலைகளுக்கும்
போட்டியடி
அலைபாயும்
கடலோடு
நுரைமிதக்கும்
கரையோடு
மண் அரித்துச் செல்லும் காலோடு
ஆனந்தமாய்
நிற்கும்
உன்னோடு
என்னோடு கொஞ்சம்
உறவாடிச் சென்றது
என் பேனா
உன்னை
வர்ணித்து
என்னை
கவிஞனாக்கி
இன்னும் தீராத
கரைமோதுகிறதோ...!
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
காமுகர்களை கடந்து கற்புடன் நடப்பதே.. சாதனை!
திரு மாங்கல்யம்
இது தீராத தாகம்!
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை...பேசவும் தடையில்லை
உயிரெழுத்தில் உறவோசை!
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
{{comments.comment}}