- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
நீலவண்ண
மேகமென
கடல் மீது
மோகம் கொண்டு
காதலோடு
கால் பதிக்க
வந்தவளே
கடல் அலையை
ரசிக்க வந்தேன்
கன்னி உன்
அழகில்
மயங்கிப் போனேன்

கடல் அலையா
இல்லை உன்
கூந்தல்
அலைபாயும்
காட்சியா
மனதில் பதிய மறுக்கிறது
கற்பனையை
தூண்டும்
காரிகையே
உன் பாத கொலுசின்
ஓசையா
இல்லை
அலை கடலின்
ஆர்ப்பரிக்கும்
ஓசையா
இயற்கையின்
படைப்பில்
வியந்துதான்
போகிறேன்
என்னை
கவிஞனாக்கிய
அழகு
தேவதையே
கடலோரம்
கால் பதித்திடவே
உனை தழுவிச்
செல்ல அலைகளுக்கும்
போட்டியடி
அலைபாயும்
கடலோடு
நுரைமிதக்கும்
கரையோடு
மண் அரித்துச் செல்லும் காலோடு
ஆனந்தமாய்
நிற்கும்
உன்னோடு
என்னோடு கொஞ்சம்
உறவாடிச் சென்றது
என் பேனா
உன்னை
வர்ணித்து
என்னை
கவிஞனாக்கி
இன்னும் தீராத
கரைமோதுகிறதோ...!
கார்கே விவகாரத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.. பிரதமர் மோடிக்கு ராகுல் கோரிக்கை
ஜல்லிக்கட்டை தடை செய்யத் திட்டமா.. சோழவந்தான் தவெக எம்எல்ஏ பேச்சுக்கு அதிமுக கண்டனம்
ஓ போஸ்ட் ஆபீஸ் இப்படித்தான் செயல்படுதா?.. நேரில் பார்த்து அறிந்த மாணவர்கள்!
சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
மாற்றம் எப்ப நிகழும் என்று விடையும் புரியலே!
சமூகம் திருந்துவது எப்போது?
அன்புள்ள அப்பா!
ஒற்றைச் சொல்
கண்மணி!
{{comments.comment}}